Wednesday, March 13, 2024

அறிவின் பயன்

அறிவு…….


ஒரு தனியார் ஆஸ்பித்திரியில் ஐ.சி.யு வார்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட படுக்கையில் மட்டும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் சரியாக 11மணிக்கு அந்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிகள் இறந்து போகிறார்கள். இது அந்த​ ஆஸ்பித்திரியில் இருக்கும் அனைவருக்கும் மிகுந்த​ அதிர்ச்சியையும், அச்சத்தையும் அளித்தது. பல​ நாடுகளிலிருந்து மிக​ சிறந்த​ மருத்துவர்களும் வந்து பார்த்துவிட்டு இறப்புகளுக்கு காரணம் தெரியாமல் குழம்பினர். மீண்டும் ஒரு ஞாயிற்று கிழமையில் என்ன​ தான் நடக்கிறது என்று பார்க்க​ மிக​ பெரிய​ மருத்துவ​ குழு ஒன்று 11மணிக்கு முன்னால் அந்த​ குறிப்பிட்ட படுக்கையை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். என்ண ஆக​ போகிறதோ என்று அன்னைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்க​.....  திடிரென உள்ளே நுழைந்தாள் ஞாயிற்று கிழமையில் மட்டும் பகுதி நேரமாக​ கூட்டி, பெருக்கும் வேலை செய்யும் முணியம்மா... வந்தவுடனையே நோயாளியின் ஆக்சிஜன் சப்ளை இயந்திரத்தின் PLUGகை​ பிடுங்கிவிட்டு தனது செல் போனை சார்ஜில் போட்டுவிட்டு கடமையே கண்ணாக அந்த​ அறையை பெருக்க​ ஆரம்பித்தாள்...  

Saturday, March 2, 2024

அவளும் நானும்

 அவளுக்கு என்னுடன் பயணிக்க வேண்டுமன்றல்லாம் ஆசையில்லை.


இருளில் தனியே நின்றுகொண்டிருந்த என்னை பாவம் பார்த்து கொஞ்ச தூரம் கைபிடித்து  

கூட்டிவந்தாள் அவ்வளவோ தான்!

Tuesday, February 20, 2024

உலக தாய்மொழி தினம்.

உலக தாய்மொழி தினம்

✍ ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள பல்வேறு தாய்மொழிகளையும், பன்மொழித்தன்மையையும் கொண்டாடுவதற்கான ஒரு தினமாகும்.

✍ தாய்மொழி என்பது ஒரு மனிதனின் அடையாளம், கலாச்சார வெளிப்பாடு, எண்ணம் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான கருவி, சமூக ஒற்றுமை மற்றும் அறிவு வளர்ச்சிக்கு முக்கியமானது.

வரலாறு:

✍ 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி வங்காள மொழிக்காக போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

✍ 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.

✍ பன்மொழித்தன்மை உலகத்தை சுவாரஸ்யமாக்குகிறது. வெவ்வேறு கலாச்சாரங்களை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. புதிய யோசனைகள் மற்றும் கருத்துகளை உருவாக்க உதவுகிறது. உலகளாவிய புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புக்கு வழிவகுக்கிறது.

✍ உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில், பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தை கொண்டாடுவதற்கான சில வழிகள்:

✍ உங்கள் தாய்மொழியில் ஒரு புத்தகம் அல்லது கவிதையை எழுதுங்கள் அல்லது படியுங்கள்.

✍ உங்கள் தாய்மொழியில் ஒரு பாடலைப் பாடுங்கள்.

✍ உங்கள் தாய்மொழியைப் பேசும் மற்றவர்களுடன் உரையாடுங்கள்.

✍ உங்கள் தாய்மொழியின் முக்கியத்துவம் பற்றி பிறரிடம் கூறுங்கள்.

இந்த தினத்தை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு உங்கள் தாய்மொழியைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அதைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் உதவுங்கள்.

 

ஒரு ஊரில் ஒரு விவசாயி நெல் பயிரிட்டான்.

நல்ல விளைச்சல் கண்டது அந்த நிலம், ஒரு நாள் நிலத்தை சுற்றி பார்த்தவன்.

ஒரு வரப்பின் ஓரம் நின்று தனக்குள்ளே பேசி கொண்டான்.

ஆ! நல்ல விளைச்சல் நாளை ஆட்களை அழைத்து வந்து எப்படியும் அறுவடை செய்துவிட வேண்டும், என கூறினான்.

இதை அந்த விளைச்சலில் கூடு கட்டி கூட்டில் இருந்த குருவி குஞ்சுகள் கேட்டுகொண்டு இருந்தது.

அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை ஆட்களை கூட்டி வந்து அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளை அறுவடை செய்யமாட்டார் கவலை பட வேண்டாம் என கூறியது.

மறுநாள் அறுவடை நடைபெறவில்லை.

மறுநாள் வந்த விவசாயி அதே இடத்தில் நின்றுகொண்டு எப்படியாச்சும் வெளியூரில் இருந்து ஆட்களை கொண்டுவந்தாவது நாளை அறுவடை செய்துவிட வேண்டும் என் கூறினான்.

மீண்டும் அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை வெளியூரில் இருந்தாவது ஆட்களை கூட்டி வந்து அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளையும் அறுவடை செய்யமாட்டார் கவலை பட வேண்டாம் என கூறியது.

அது போலவே மறுநாளும் அறுவடை நடக்கவில்லை.

மறுநாள் வந்த விவசாயி அதே இடத்தில் நின்றுகொண்டு எப்படியாச்சும் நாளை நாமே இறங்கியாவது அறுவடை செய்துவிட வேண்டும் என் கூறினான்.

மீண்டும் அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை அவரே இறங்கி அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளையும் அறுவடை கட்டாயம் நடைபெறும்,வாருங்கள் நாம் வேறு இடத்திற்கு பத்திரமாக சென்றுவிடலாம் என கூறியது.

உடனே குஞ்சுகள் ஏன் அம்மா நாளை கட்டாயம் நடைபெறும் என்று கூறுகின்றீர்கள் என கேட்டன,

அதற்கு தாய் குருவி கூறியது

இதுநாள் வரை விவசாயி அடுத்தவர் மீது நம்பிக்கை வைத்திருந்தான்,

ஆனால் இன்றோ தன் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறான். என கூறியது.

*தன்னம்பிக்கை வெல்வது உறுதி*

என் தம்பிகளின் வெற்றி உறுதி👍👍👍

Tuesday, February 13, 2024

வலுவிழக்கும் ஜாக்டோஜியோ போராட்டம்

 *243 ரத்து கோரிக்கை இடம்பெற்றதால் வலுவை இழக்கும் 

ஜாக்டோ-ஜியோ போராட்டம்*



*CPS ஒழிப்புக்காக நாம் எப்போதும் போராட தயார்*

🩸

*நம்முடைய வாழ்வாதார கோரிக்கை பங்களிப்புத் திட்டத்தை ரத்து செய்வது & நம்முடைய பதவி உயர்வு கோரிக்கையும் புறந்தள்ளி விட முடியாது.*

 *ஆனால் ஜாக்டோ ஜியோ முரண்பாடான கோரிக்கைகளை வைக்காமல் பொது கோரிக்கைகளுக்காக போராட வேண்டும்.*

*243 ரத்து செய்ய வேண்டும் என்பதை மாற்றி திருத்தங்களை செய்ய வேண்டும்.*

*என்கிற கோரிக்கை வைத்தால்  உடன்பாடு உண்டு.* 

*இல்லையேல் நடுநிலைப்பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதில் பெரும் சிக்கல் உள்ளது.

CPS ஐ காட்டி 243 ரத்து செய்ய நினைப்பதை தடுக்கவேண்டும்.*

*ஆகவே பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு என்ற இரண்டு கோரிக்கைகளை வைத்து மட்டுமே போராட வேண்டும்.*

*243 ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை இடம் பெறக் கூடாது.*

Thursday, January 25, 2024

நன்றி அறிவிப்பு

 “நீதி வெல்லும்”

நடைமேடையில் ஓரமாக வாகனம் வராத இடத்தில் ஒரு குழந்தை விளையாடி கொண்டு இருந்தது. 

ஒரு 15 குழந்தைகள் அடிக்கடி வாகனம் செல்லும் சாலையில் விளையாடி கொண்டு இருந்தனர். 

அச்சாலை வழியே வேகமாக தனது பாதையில் வந்த லாரியின் ஓட்டுநர் சாலையில் 15 சிறுவர்கள் விளையாடுவதை பார்த்தார்.

அதே சமயம் நடைமேடையில் ஒரு குழந்தை மட்டும் விளையாடுவதை பார்த்தார்.

உடனே வேகமாக வந்த லாரியை நடைமேடை பக்கம் திருப்பி அக்குழந்தை மீது ஏற்றி 15 குழந்தைகளின் உயிரை காத்தார்.

கூட்டமாக செய்தால் தவறும் சரியாக கருதப்படும் மனநிலையில் பலர்.

ஆனால் 

சில நீதிமான்களால் மட்டுமே

தவறான பாதையில் செல்பரை தண்டிக்க முடியும்.

வாருங்கள்.

வெற்றி பெருவோம்!

போர்… போர்…




Thursday, January 4, 2024

இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம்

 1500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி வழங்குதல்- ஆணை வெளியீடு.


பள்ளிக்கல்வி - ஆசிரியர் நேரடி நியமனம்- அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் 1500 பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டதில் தேர்வாகும் தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில்.. முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GO No.07 dt 04.01.2024 - Sec Gr Teachers - Addl Posts GO👇

Downlode Here

மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் - நன்மையே!

 தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவில் முன்னுரிமையால் ஏற்படும் நன்மைகள்

1. அனைத்து ஆசிரியர்களும் மாநில அளவில் பணி மாறுதல் பெறலாம் குறிப்பாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்


2. அனைத்து ஆசிரியர்களுக்கும் சம நிலையில் பதவி உயர்வு. மாநிலத்தின் எந்த பகுதியில் காலி பணியிடமிருக்கோ அங்கு பதவி உயர்வு பெற்ற பிறகு மீண்டும் பணி மாறுதல் பெற்றுக் கொள்ளலாம்
3.பள்ளிக் கல்வித்துறை போன்றே தொடக்க கல்வித் துறையிலும் ஆசிரியர் வருகை பதிவேட்டில் நியமனம் /பதவி உயர்வு தேதியின் அடிப்படையில் ஆசிரியர் பெயர் எழுதப்படும்
 
4.தொடக்கக் கல்வித் துறையில் பணி மாறுதல் பெற்ற தேதியின் அடிப்படையில் ஆசிரியர் வருகை பதிவேட்டில் பெயர் எழுதுவது நீக்கப்படும்

5 இனி பள்ளிக்கல்வித்துறை போன்றே கலந்தாய்வு நடைபெற்ற பிறகே பதவி உயர்வு நடைபெறும்

6. மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் பராமரிக்கும் பொழுது நம்பகத்தன்மை உள்ளதாகவும் இருக்கும். அனைவரும் மாநில அளவில் தெரிந்து கொள்ளும்படியாகவும் இருக்கும்

பள்ளி திறந்த முதல் நாள் CL எடுக்கலாமா?

 தெரிந்து கொள்ளுவோம்!


வழக்கமாக ஒவ்வொரு விடுமுறை காலங்களில் ஏற்படும் சந்தேகம் தான் 😁

ஜனவரி 2 பள்ளி திறக்கும் நாளில் ஒரு ஆசிரியர் CL கட்டாயம் கேட்கிறார் வழங்கலாமா?

இந்த முறை 2/1/24 அன்று CL வழங்க இயலாது.....

ஏன்? அவர் last working day 22/12/23 வந்து விட்டார்...

Either last working day or first working day வந்தால் போதும் என நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் 🤔

CL vacation/ non vacation அனைத்து பணியாளர்களுக்கும் பொதுவானது ...

CL (விடுப்பு+விடுமுறை ) 10 நாள்கள் வரை allowed..... 

11 வது நாள் பணியில் இருக்க வேண்டும் 

( எதிர்பாராத விதமாக 11 வது நாள் இயற்கை பேரிடர், தலைவர்கள் மரணம் என அரசு திடீரென விடுமுறை அறிவித்தார்கள் எனில் பிரச்சினை இல்லை, அனுமதி உண்டு)...

இந்த முறை 23 /12/23 முதல் 1/1/24 வரை 10 நாள்கள் விடுமுறை....

2/1/24 CL எனில் 10 விடுமுறை நாள்கள் + 1 விடுப்பு நாள் , என 11 நாள்கள் ஆகிறது....

(22/12/23 கடைசியாக பணிக்கு வந்த நாள் , அதற்கு பிறகு 3/1/24 எனில் 11 நாள்கள் ) எனவே இது CL விதிகளின் படி எடுக்க இயலாது ....

எனவே தான் இந்த ஆண்டு 2/1/24 பள்ளி திறக்கும் நாளில் போது ( 12 CL கைவசம் இருந்த போதிலும் 😃) CL அனுமதிக்க இயலாது ..

ஒருவேளை 22/12/23 கடைசி வேலை நாள் போது பிற்பகலில் CL அல்லது நாள் முழுவதும் CL அனுமதித்து இருந்தாலும் அதுவும் தவறு தான்...

சரி....

 2/1/24 அன்று கட்டாயம் ஒரு ஆசிரியருக்கு விடுப்பு தேவை... என்ன செய்யலாம்?

CL தான் வழங்க இயலாது....

 EL எடுக்கலாம்

அரசு விடுமுறை முன் இணைப்பு அனுமதி உண்டு ...

2/1/24 ஒரு நாள் EL எனில்...

முன்னர் உள்ள விடுமுறை காலம் முன் அனுமதி ...

(*ஒரு நாள் மட்டுமே EL) 

(22/12/23 பணிக்கு வந்து இருக்க வேண்டும்) 

22/12/23 அன்றும் வரவில்லை

2/1/24 அன்றும் வரவில்லை என்றால்

 12 நாள்கள் EL ஆக மாறிவிடும்...

இந்த பதிவின் நோக்கம்...

1) கோடை விடுமுறை எப்போதும் 10 நாள்களுக்கு மேல் என்பதால்

 ஏப்ரல் கடைசி வேலை நாள்...

அதே போல் ஜூன் பள்ளி திறக்கும் முதல் நாள் அன்று 

எப்போதும் CL எடுக்க இயலாது

2) காலாண்டு / அரையாண்டு விடுமுறை பொறுத்தவரை ஆண்டிற்கு ஆண்டு 

 மாறுபடும் ....

அந்த ஆண்டில் 10 நாள்களுக்குள் எனில் CL எடுக்கலாம் ...

 விடுப்பு+விடுமுறை 10 நாள்களுக்கு மேல் என்றால் எடுக்க இயலாது .

EL எடுக்கலாம்

அரசு விடுமுறை முன் இணைப்பு அனுமதி உண்டு ...

2/1/24 ஒரு நாள் EL எனில்...
முன்னர் உள்ள விடுமுறை காலம் முன் அனுமதி ...
(*ஒரு நாள் மட்டுமே EL) 

(22/12/23 பணிக்கு வந்து இருக்க வேண்டும்) 

22/12/23 அன்றும் வரவில்லை
2/1/24 அன்றும் வரவில்லை என்றால்
 12 நாள்கள் EL ஆக மாறிவிடும்...

இந்த பதிவின் நோக்கம்...

1) கோடை விடுமுறை எப்போதும் 10 நாள்களுக்கு மேல் என்பதால்
 ஏப்ரல் கடைசி வேலை நாள்...

அதே போல் ஜூன் பள்ளி திறக்கும் முதல் நாள் அன்று 
எப்போதும் CL எடுக்க இயலாது

2) காலாண்டு / அரையாண்டு விடுமுறை பொறுத்தவரை ஆண்டிற்கு ஆண்டு 
 மாறுபடும் ....

அந்த ஆண்டில் 10 நாள்களுக்குள் எனில் CL எடுக்கலாம் ...

 விடுப்பு+விடுமுறை 10 நாள்களுக்கு மேல் என்றால் எடுக்க இயலாது .

Thursday, December 28, 2023

பட்டதாரி ஆசிரியர்கள்

 மாநில முன்னுரிமை அரசாணை 243, தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளும், அரசாணையின் நிறைகளும்.

* அரசாணை எண் 12 ல் Head master / Headmistress of middle Schools - By Promotion from class II and Category 1 of Class III of the Service in Combined Seniority என்ற விதி ரத்து செய்யப்படுகிறது . நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் Uதவி உயர்வு  பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொகுப்பு முன்னுரிமை Uட்டியல் படி வழங்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது .

* By the Promotion from the Categories in Class Il என்ற புதிய அமெண்ட்மென்ட் படி

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் .

* பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு  தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்  மற்றும் இடைநிலை ஆசிரியகளுக்கு வழங்கப்படும் விதி ரத்து செய்யப்படுகிறது . By Promotion from the eligible Persons in Category 1 of Class III என்ற விதியின் படி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியும் .இடைநிலை ஆசிரியர் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக இனி பதவி உயர்வு பெற முடியாது .

* For the Purpose of appointment Category 1 of Class 1 State Shall be a unit என்ற விதியின் படி வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு மட்டுமே மாநில சீனியாரிட்டி முறையில் நியமனம் , மாறுதல் நடைபெற்றது .

For the Purpose of appointment to any of the Categories in the Service the state Shall be Unit என்ற புதிய அமெண்ட்மன்ட் படி  மாநில முன்னுரிமை படியே அனைத்து பதவி உயர்வுகளும் ,மாறுதலும் நடைபெறும் . புதிய விதியின் படி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேறு ஒன்றியத்திற்கு , வேறு மாவட்டத்திற்கு பதவி உயர்வு பெற முடியும் 

* புதிய அரசாணையில் நீதிமன்ற தீர்ப்புகளின் படி மாநில சீனியாரிட்டி வழங்கப்பட காரணம் என்று கூறப்பட்டுள்ளது .

*நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக பட்டதாரி ஆசிரியர்களை நீண்ட காலம் புறக்கணித்ததின் விளைவு புதிய விதி ..

Sunday, December 3, 2023

மழை

 


ஒளிந்தால்

தேடுகிறான்...


விழுந்தால்

ரசிக்கிறான்...


எழுந்தால்

ஓடுகிறான்...


ஓடினால்

ஒளிகிறான்...


மனிதனோடு

கண்ணாமூச்சு

விளையாடுகிறது...


*"மழை"*

Tuesday, November 21, 2023

தோட்டம்

 


தோட்டம்

என்பது...


அழகிய

மலர்களால்

நிறைந்தது

மட்டுமல்ல,


காய்ந்த

சருகுகளும்

சேர்ந்ததுதான்.



Tuesday, November 14, 2023

மழை விடுமுறை இல்லை




 🌧️ *கனமழை காரணமாக இன்று (15.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

*திருவள்ளூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

*சென்னை* (பள்ளிகள்) 

*புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

🌧️ *விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

☹️ *காஞ்சிபுரம்*

☹️ *விழுப்புரம்*

Saturday, November 11, 2023

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

இனிய...
தீபாவளி நல்வாழ்த்துகள்.

மனதில்
மகிழ்ச்சி மத்தாப்பு
பூத்துக் குலுங்கட்டும்! 

இல்லத்தில்
சிரிப்புச் சரவெடி
சிதறி கிடக்கட்டும்!

பூவாணமாய்
நல்லெண்ணங்கள்
மேலோங்கி மின்னட்டும்!

சங்குச்சக்கரங்களாய்
வாழ்க்கைச் சக்கரம்
ஒளிவீசி சுழலட்டும்!

இயற்கை அன்னைக்கும்,
உயிரினங்கள் எவற்றிற்கும்
இடையூறு செய்யாமல்...

அதிரடி
வெடியில்லாமல்...

கந்தகப் புகை
எழுப்பாமல்...

தெருவை
குப்பை மேடாக்காமல்...

இயற்கையைப்
பேணும் வண்ணம்...

இனிதே கொண்டாட
இதயபூர்வ வாழ்த்துகள்.

வாழ்த்துகளுடன்…..


Saturday, September 23, 2023

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள்.

 ஆ. மிகாவேல்    ஆசிரியர் , மணப்பாறை 

     ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு 1000 க்கும் மேல் மனு எழுதி கொடுத்துள்ளேன்.

என்னை அணுகி நான் வழக்கு தொடர உதவிய வழக்குகள் 500 ஐ தொடும் .பதவி உயர்வு வழக்கு மேல் முறையீடு செய்ய வேண்டாம் என கூறிய வழக்குகள் 50 ஐ தாண்டும் .Audit வழக்குகளில் , தேர்வு நிலை வழக்குகள் , இளையோர் மூத்தோர் ஊதிய நிர்ணய வழக்குகள் ,ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள், பணி வரன்முறை வழக்குகள் பங்களிப்பு செய்து வருகிறேன் . பழைய ஓய்வூதிய திட்டம் நீதி மன்ற தீர்ப்பின் மூலம் 20 பேருக்கு பெற்றுக் கொடுத்துள்ளேன் .

01.06.2009க்கு பிறகு பணியில் சேர்ந்த 30 பேருக்கு Fitment 1.86 நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொடுத்துள்ளேன் . அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற்றுக் கொடுத்துள்ளேன்

* வழக்குகளில் இரண்டு வாய்ப்புகள் தான் . வழக்கில் வெற்றி பெறுவது , வெற்றிகாக சரியான முறையில் போராடினோம் என்பது .

* ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வு என்று வெவ்வேறு வழக்குகளில் இதுவரை 10 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர் .

* சீராய்வு Review பயன் தராது என்று பதிவு செய்துள்ளேன் . வழக்கு உச்ச நீதிமன்றம் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் Review பற்றி விரிவாக பதிவு தவிர்க்கிறேன் 

* ஒரு குறிப்பிட்ட சங்கம் உச்ச நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது சரி . வழக்கு சார்ந்த எனக்கு உள்ள நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் கூறுகின்றேன் . 

* உயர் நீதிமன்ற தீர்ப்பில் மாநில  அரசின் உரிமை தொடர்பாக விரிவாக ஆராய பட்டுள்ளது .எனவே இந்த வழக்கில் அரசியல் சாசன வழக்கில் அனுபவமுள்ள உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வாதம் அவசியமாகிறது 

.மற்ற சங்கங்கள் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரை அமர்த்துவது அவசியமாகும் .

* முதுகலை ஆசிரியர் , உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் PG பணியாற்றி பதவி உயர்வு பெற்றோரை பணி இறக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது . தற்போது இவர்கள் மூத்த வழக்கறிஞர் மூலம் உயர் நீதிமன்ற  Review செய்துள்ளனர் . வழக்கு தள்ளுபடி செய்ய அதிக வாய்ப்பு உண்டு ஆனால் உச்ச நீதிமன்றம் இவர்களின் கோரிக்கையை ஏற்க வாய்ப்பு உண்டு .

* வழக்கை சரியான திசையில் நடத்தவில்லையெனில் தகுதித் தேர்வின்றி பதவி உயர்வு பெற்ற றோருக்கும் மேற்கண்ட பத்தியில் சுட்டிக்காட்டிய பிரச்சனை எழ வாய்ப்பு உண்டு .ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வாரம் ஒரு தீர்ப்பில் பாதுகாப்பு செய்துள்ளது .உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முன்பே Uதவி உயர்வில் சென்றோரை பணி இறக்கம் செய்ய கூடாது .

* ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தீர்ப்பு வந்தவுடன் எனது பதிவை பார்த்து , யூ டியூப் தளம் ஒன்று என்னை பேட்டி எடுக்க கேட்டனர் . விடுமுறை நாளில் தொடர்பு கொள்கின்றேன் என்று கூறி தொடர்பு கொள்ளவில்லை .இதை குறிப்பிட காரணம் பரபரப்பு காக பதிவு செய்வது எனது நோக்கம் அல்ல .

* வழக்கில் உள்ளதை உள்ளபடி பேசினால் தான் வெற்றி பெற முடியும் . பொய்யான நம்பிக்கை வெற்றி தராது .

* இந்த வழக்கோடு தொடர்புடைய 42 ஆசிரியர்களுக்கு வழக்கில் வெற்றி பெற எழுதி கொடுத்துள்ளேன் .மூத்த வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளனர் .

* அரசாணைகளை நீதிமன்ற தீர்ப்பின் வழியாக எப்படி புரிந்து கொள்வது , துறையால் வழங்க முடியாதவற்றை , வழங்க மறுப்பவற்றை நீதிமன்றம் மூலம் பெற்று தருவது என்ற காலமும் இயற்கையும் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் .

ஆ. மிகாவேல்

ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706

DA TN Govt



ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா - பணி

 ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 


அப்ரெண்டிஸ் விண்ணப்ப சாளரம் 

இன்று செப்டம்பர் 21, 2023 அன்று இரவு 11:59 மணிக்கு முடிவடைகிறது. இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் 20-28 வயதுடைய விண்ணப்பதாரர்களுக்கு 6160 பதவிகளை வழங்குகிறது. வெற்றிபெறும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ. 15,000 உதவித்தொகையுடன் ஒரு வருட பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுவார்கள். தேர்வு செயல்முறை ஆன்லைன் எழுத்துத் தேர்வையும் உள்ளடக்கியது, மேலும் தேர்வு அக்டோபர்/நவம்பரில் திட்டமிடப்பட்டுள்ளது. விலக்கு பெற்ற SC/ST/PwBD வேட்பாளர்களைத் தவிர, விண்ணப்பதாரர்கள் ரூ.300 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

எஸ்பிஐ அப்ரண்டிஸ் 2023: 6160 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 

www.sbi.co.in

நேரடி இணைப்பு

எஸ்பிஐ அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு 2023: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) இன்று, செப்டம்பர் 21, 2023, இரவு 11:59 மணிக்கு அப்ரண்டிஸ் பதவிக்கான பதிவு சாளரத்தை மூடும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in இல் உள்ள அதிகாரப்பூர்வ SBI ஆட்சேர்ப்பு போர்டல் மூலம் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


Monday, September 18, 2023

யானை முகம் வந்த கதை

 


யானை முகத்தோர் ஐந்து கரத்தோர் விக்னேஸ்வரர் மூஷிக வானர் என்று பல பெயர்களால் வழிப்படும் விநாயகர்  ஹிந்துக்களின் முழு
 முதல் கடவுள்.

வினை தீர்க்கும் விநாயகர் எப்படி பிறந்தார் அவருக்கு மனிதர்களில் முகம் இல்லாமல் ஏன் யானை முகம் உள்ளது என்று புராணக்கதை மூலம் அறியலாம்.

விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. தேவர்களுக்கு இடையூறு செய்த அரக்கர்களை ஒடுக்க பரமசிவன் பார்வதியால் விநாயகர் யானை முகத்தோடு மனித உடலோடு படைக்கப்பட்டார் அரக்கன் கஜமுக அசுரனை அழித்து தேவர்களை மீட்டார்.

கைலாயத்தில் ஒரு நாள் பார்வதி தேவி நீராடுவதற்காக செல்லும் பொழுது நிகழ்ந்த உரையாடலை காண்போம்.

பார்வதி தேவி நீராடும் சமயம் சிவபெருமான் பார்வதி தேவியை காண வருகிறார், சிவனைக் கண்ட பார்வதி சினம் கொண்டார்.

மறுநாள் பார்வதி தேவி தன் மீது உள்ள சந்தனத்தால் அழகிய உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். மீண்டும் சிவபெருமான் வந்தார் அங்கு நிற்கும் பாலகன் யாராக இருப்பான் என்று எண்ணியவாறு உள்ளே செல்ல முயன்றார்.

கோபம் அடைந்த சிவன் அங்குள்ள காவலர்களை அழைத்து பாலகனை அங்கிருந்து அகற்றுங்கள் என்று கூறி சென்று விட்டார். தோல்வியுற்ற வீரர்கள் சிவனிடம் முறையிட்டனர் இதை அறிந்த சிவபெருமான் விநாயகரை அங்கிருந்த சூலாயத்தால் அவர் தலையை கொய்தார்.

விநாயகரின் சத்தம் கேட்டு அங்கு வந்த பார்வதி பிள்ளையாருக்கு தலை இல்லாததை பார்த்து கோபமடைந்தார் தான் செய்த பிள்ளையாரை சிவனே சிதைத்ததை அறிந்து அவர் காளியாக மாறி உருவம் எடுத்து வெளியேறி அவரது கண்களில் பட்ட சகலத்தையும் அழிக்க தொடங்கினார்.

அங்கிருந்த தேவர்கள் அனைவரும் சிவனிடம் முறையிட்டனர், அதாவது பார்வதி தேவி காளியாக உருவம் கொண்டு ஆக்ரோஷத்துடன் இருக்கிறார் என்றனர், சிவன் சமாதானம் செய்ய முடிவெடுத்தார்.

சிவபெருமான் பிற தேவர்களை அழைத்து வடதிசையில் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவ ராசியில் தலையை வெட்டி எடுத்து வர ஆணையிட்டார், கூறியவாறு வட திசையில் முதலில் தென்பட்ட யானையை கொண்டு வந்தனர்.

யானையின் தலையை வெட்டி எடுத்து சிவனிடம் கொடுத்தனர் யானையின் தலையை வெட்டி எடுத்து தலையை வெட்டப்பட்டு கிடந்த பிள்ளையாரின் முகத்தில் வைத்து உயிர் கொடுத்தார் சிவபெருமான்.

பார்வதிதேவி சமாதானம் கொண்டு விநாயகரை கட்டி அணைத்தார், அதன் பிறகு சிவபெருமான் விநாயகருக்கு கணேசன் என்று பெயர் சூட்டினார், மற்றும் சிவபெருமான் கணேசனை தேவனுக்கு தலைவராக நியமித்தார் என்று நாரத புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜமுக சூரனை அழிக்க விநாயகர் படைத்துள்ளனர் அதோடு முழு முதல் கடவுளாக விளங்குவார் எங்கு பூஜை செய்தாலும் முதல் பூஜை கணபதிக்கு தான் என்று வரம் கொடுத்தார்.

Monday, September 11, 2023

இல்லம் தேடி கல்வி




அடுப்படி பட்டதாரி

மாலை நேரம், முல்லை வயல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பினாள். வயல் காட்டில் இருந்த விறகுகளை சேகரித்து அதை தன் தலையில் சுமந்து கொண்டு வந்தாள். 

வரும் வழியில் ஒரு வீட்டில் குழந்தைகள் ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருந்தார். அதை கண்ட முல்லை, என்ன இங்கு கடந்த வாரம் வரை இந்த குழந்தைகள் கூட்டம் இங்கு இல்லை,ஆனால் சில நாட்களாக ஆங்காங்கே குழந்தைகள் கூடி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், என்று யோசனை செய்தபடிநடந்து சென்றாள். 

அங்கு அவள் வீட்டுக்கு அருகில் ஒரு மரத்தடியில் குழந்தைகள் கூட்டமாய் இருந்ததை கண்டாள். அதில் தனது மகள் பூவிழியும்,இருந்ததை பார்த்த அவள் பூவிழி இங்கு என்ன செய்கிறாய், எனக் கேட்டவாறு பூவிழியை நோக்கி நகர்ந்தாள்.

அங்கு ஒரு பெண், தனது கையில் வண்ண, வண்ண புகைப்படங்கள் வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு கதை ஒன்றை சொல்லிக் கொடுத்தாள். அங்கு சென்ற முல்லை அந்த பெண்ணிடம், நீங்கள் யார் இங்கு என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டாள். 

அதற்கு அந்த பெண் இது இல்லம் தேடிக் கல்வி திட்டம். இந்த திட்டம் த‌மிழக‌ முதல்வர் அவர்களால் உருவாக்கப்பட்டு,பல உயர் அதிகாரிகள் மற்றும் என்னை போன்ற தன்னார்வலர்களாலும்,செயல் பட்டு வருகிறது. 

இங்கு மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை, ஆடல், பாடல், கதைகள் மூலமாக நாங்கள் சரி செய்து வருகிறோம்.அதுவே எனது பணி. இன்று முதல் இங்கேயும் ஒரு மையம் செயல் படத் தொடங்கியுள்ளது. அதனால் தான் உங்கள் மகளும் இங்கே வந்துள்ளாள்,என அந்த பெண் கூறினாள். 

பின்னர் அந்த பெண்ணின் அனுமதியுடன் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு, தானும் ஒரு குழந்தையை போல் மெய் மறந்து போனாள்.திடீரென அருகில் உள்ள கோவிலில் மாலை மணி 6 என ஓசை ஒலித்தது. 

துடித்து  எழுந்த முல்லை, நேரம் போனதே தெரியவில்லை, மணி ஆகிவிட்டது. நான் முன்னர் செல்கிறேன், பூவிழி  நீ வகுப்பை முடித்து விட்டு வா என்று கூறியவாறு  விறகை சுமந்து கொண்டு தன் வீட்டில் கொண்டு போய் இறக்கி வைத்தாள். அங்கே இறக்கி வைக்கப்பட்டது விறகு சுமை மட்டுமல்ல, தன்னைப் போல்  தனது குழந்தையின் கல்வியும் எண்ணாகுமோ என்று நினைத்த மனச் சுமையும் தான்.....

கை, கால்களை கழுவிக் கொண்டு, இரவு உணவாக என்ன சமைப்பது என்று நினைத்தபடி சமையலறையில்  நுழைந்தாள், அங்கு அவளும் ஒரு பட்டதாரி தான். 
அவள் வீட்டு அடுப்படியில்......

Sunday, August 20, 2023

திரௌபதி யார். மகாபாரத சந்தேகம்


மகாபாரத பாத்திரங்களின் பிறப்புகளை மட்டும் இங்கே பார்ப்போம். கிருஷ்ணன் தவிர முக்கிய பாத்திரங்கள் யாரும் கணவனுக்கும் மனைவிக்கும் பிரசவித்தவர்களாக இல்லை. ஆரம்பத்தில் இருந்தே போவோம் வாருங்கள்.

சத்தியவதி - உபரிசரன் என்ற மன்னனுக்கும் அந்த மன்னனின் விந்தணுவை உண்ட மீனுக்கும் பிறந்தவர்.

வேதவியாசர் - சத்தியவதிக்கும் கணவன் அல்லாத பராச முனிவருக்கும் பிறந்தவர்.

பீஷ்மர் - சாந்தனு மன்னனுக்கும் கங்கை நதிக்கும் பிறந்தவர்.

திருதராஷ்டினன் - வேத வியாசருக்கும் விசித்திரவீரியனின் மனைவியான அம்பிகாவிற்கும் பிறந்தவர்.

பாண்டு - வேத வியாசருக்கும் விசித்திரவீரியனின் மனைவியான அம்பாலிகாவிற்கும் பிறந்தவர்.

விதுரன் - வேதவியாசருக்கும் விசித்திரவீரியனின் மனைவியரின் 

பணிப்பெண்ணிற்கும் பிறந்தவர்.

கௌரவர்கள் - நூறு பானைகளில் கருக்கட்டப்பட்டவர்கள்.

கர்ணன் - சூரியன் என்ற நட்சத்திரத்திற்கும் குந்தி என்ற பெண்ணிற்கும் பிறந்தவர்.

தர்மன் - எம தர்மனுக்கும் பாண்டுவின் மனைவி குந்திக்கும் பிறந்தவர்.

வீமன் - வாயு பகவானான காற்றிற்கும் பாண்டுவின் மனைவியான குந்திக்கும் பிறந்தவர்.

அர்ஜினன் - சுவர்க்கத்தின் அதிபதி இந்திரனுக்கும் பாண்டுவின் மனைவியான குந்திக்கும் பிறந்தவர்.

நகுலன் & சகாதேவன் - அசுவினி குமாரர்களிற்கும் பாண்டுவின் மனைவியான மாதுரிக்கும் பிறந்தவர்கள்.

திரௌபதி & திருஷ்டத்துய்மன் - யாக குண்டத்தின் நெருப்பில் இருந்து உருவானவர்கள்.

துரோணர் -  பரத்வாச முனிவர் அவரது விந்தை கலச குண்டத்தில் விட்டபோது பிறந்தவர்.


Saturday, August 19, 2023

திடம்

 நாம்

சந்திக்கும்...

ஏழ்மையும்,

ஏளனமும்...

நம்மைத்

திடப்படுத்துகின்றன.

Friday, August 11, 2023

ஏமாற்றம்

ஏமாற்றுதலையும்,
நயவஞ்சகத்தையும்
"சாதுர்யம்"
என்கிறார்கள்,

நேர்மையையும்,
நியாயத்தையும்
"ஏமாளித்தனம்"
என்கிறார்கள்.

Thursday, July 27, 2023

அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி

வரும் 2022 ஆகஸ்டு 13 முதல் வரை தமிழகத்திலுள்ள " அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி " ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும் , 75 வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கவும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள , அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்