Thursday, May 29, 2014

ELE BT

கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு

            பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாக பணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, சம்பந்தபட்ட இரு துறைகளும், முடிவு செய்துள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர் - மாணவர் சராசரி எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறை:
 
         அதன்படி, ஆரம்ப பள்ளிகளில், ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர் என்ற வீதத்திலும், 5ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, 1:35, 9ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 1:40 என்ற வீதத்தில் இருக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், அறிவியல் பிரிவு வகுப்பாக இருந்தால், 1:40 என்ற வீதத்திலும், தொழிற்கல்வி பிரிவு வகுப்பாக இருந்தால், 1:25 என்ற வீதத்திலும் இருக்கலாம் என, கணக்கு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய வரையறையை விட, ஆசிரியர் - மாணவர் சதவீதம், குறைவாகவே உள்ளது. ஆரம்ப பள்ளிகளில், 10 முதல், 20 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை, பல இடங்களில் உள்ளது. தேவையை விட, பல பள்ளிகளில், கூடுதல், ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். அதே நேரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட, வட மாவட்ட பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை, அதிகமாக உள்ளது. இந்த சமநிலையற்ற நிலையை மாற்றி, அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர் பணியாற்றுவதை உறுதி செய்யும் வகையில், பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. தேவையை விட, கூடுதலாக பணியாற்றும் ஆசிரியர் எண்ணிக்கை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து, இரு துறைகளும் விவரம் சேகரித்துள்ளன.
 
பள்ளி திறப்பதற்குள்...:
 
           அதனடிப்படையில், இரண்டிலும், கூடுதலாக உள்ள, 3,000 பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, இரு துறை அதிகாரிகளும், முடிவு செய்துள்ளனர். பள்ளி திறப்பதற்குள், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என, தெரிகிறது. இந்தப் பணி முடிந்த பின், ஜூன், இரண்டாவது வாரத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என, தெரிகிறது. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணி நிரவல் (டெப்ளாய்மென்ட்) நடவடிக்கையால், ஆசிரியர்கள், பீதி அடையத் தேவையில்லை. தற்போது ஆசிரியர் பணிபுரியும் மாவட்டத்திற்குள் தான் மாற்றம் இருக்கும். வேறு மாவட்ட மாறுதல், பெரும்பாலும் வராது' என்றார்.

Tuesday, May 27, 2014

MED

காரைக்குடி , அழகப்பா பல்கலை கழ்கம் - பி.எட்., விண்ணப்ப தேதி நீட்டிப்பு


அழகப்பா பல்கலை கழக தொலை நிலை கல்வி இயக்ககத்தில் பி.எட்., (இரண்டாண்டு காலம்) படிப்புக்கான,விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி, ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை, அழகப்பா பல்கலை கழக தொலை நிலை கல்வி இயக்ககத்தில், பெற்று, ""இயக்குனர், தொலை தூர கல்வி இயக்ககம், அழகப்பா பல்கலை கழகம்'' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பல்கலை கழக இணைய தளத்திலும் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 டி.டி., எடுத்து அனுப்ப வேண்டும், என பதிவாளர் மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளார்.



MBBS

DME: MBBS / BDS COURSES 2014 - 2015 SESSION - KNOW YOUR A.R. NO.

Directorate of Medical Education
Selection Committee
No.162, Periyar E.V.R.  High Road, Kilpauk, Chennai - 10
MBBS/BDS COURSES 2014 - 2015 SESSION
KNOW YOUR ARNO
MBBS/BDS COURSE 2014 - 2015 SESSION
Application No. in OMR
(OR)
Details of Qualifying Examination Passed
 Registration No.(And)
 Year

Monday, May 19, 2014

hot news

மொட்டை மாடியில் வெப்பத்தை தணிக்கும் நுட்பம்







கோடைக்காலத்தில் அக்னி வெயிலின் உக்கிரம் அனலாக கொட்டும் காலகட்டம் தொடங்கி விட்டது. வீட்டுக்குள் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்பதால் அதற்கு ஏற்ப மின்சாதனங்களின் தேவை அதிகமாக இருக்கும். எனினும் அறைக்குள் அனலின் தாக்கம் வெளிப்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.
வெப்ப தாக்கம்
அதை தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி அறைக்குள் வெப்பச்சூழலை குறைக்கலாம். பொதுவாக வீட்டுக்குள் மேல்கூரையின் வழியாகவே வெப்பம் அதிகமாக உமிழப்படும். அதிலும் இரவு வேளைகளில் அதன் பாதிப்பு அதிகம் வெளிப்படும். அதை குறைப்பதற்கு மேல்கூரை பகுதியில் தேவையான மாற்றங்களை செய்வது அவசியமாகிறது.
 தற்போது மேல்கூரை வழியாக அதிக வெப்பம் உள் நுழைவதை தடுக்கும் வகையில் டைல்ஸ்கள் வந்து விட்டன. அவை புதிதாக கட்டப்படும் கட்டிடங்களின் மேல் தளங்களில் போடப்படுகின்றன. பழமையான கட்டிடங்களின் மேல்தளங்களில் இத்தகைய டைல்ஸ்களை மாற்ற முடியாத நிலையில் ஒருவகை பெயிண்டு கரைசலை பயன்படுத்தலாம். அவை மொட்டை மாடியின் வழியாக அதிக அளவில் வெப்பம் உள்நுழைவதை தடுக்கும் தன்மை கொண்டவை.
வெப்பம் உள்நுழைவதை தடுக்கலாம்
‘ஹீட் ரூப் கோட்டிங்’ எனப்படும் இக்கலவையை மொட்டை மாடி தளங்களில் பிரசை கொண்டு பூச வேண்டும். அதற்கு முதலில் மாடியின் தளப்பகுதியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதில் தூசி, அழுக்கு படியாத வகையில் நன்றாக தண்ணீர் விட்டு கழுவி தரையை உலர்த்த வேண்டும். தரையில் விரிசல் ஏற்பட்டு இருந்தால் அதையும் சரி செய்ய வேண்டும்.
பின்னர் ஹீட் ரூப்பிங் கலவையை தரைத்தளத்தின் மேல் பகுதியில் பிரஷ்ஷால் பூச வேண்டும். இந்த வேலையை மாலை வேளைகளில் மேற்கொள்வது பலனளிக்கும். இக்கரைசல் வெள்ளை நிறத்தில் இருப்பதால் தரை அதிகம் சூடாவது தடுக்கப்படுகிறது. இம்முறையை பயன்படுத்தி மேல்தளத்தில் பூச்சு மேற்கொள்வதன் மூலம் சுமார் 70 சதவீதத்துக்கும் மேலாக வெப்ப தாக்கம் குறையும்.
மிதமான சூழலை எதிர்பார்க்கலாம்
மேலும் அதிகமான குளிர்ச்சியை தக்கவைத்துக்கொள்ள ‘ஹீட் ஷீல்டு’ என்ற கோட்டிங்கை பூசலாம். இந்த பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கரைசலை மேல்தளத்தில் அடர்த்தியாக பூச வேண்டும். அது வெப்பம் உள்   நுழைவதை தடுத்து திருப்பி அனுப்பும் தன்மை கொண்டது என்பதால் அறைக்குள் அதிக அனல் நுழைவது குறைந்து மிதமான சூழல் நிலவ வழிவகை பிறக்கும். இதுபோன்ற பல நுட்பமான கோட்டிங் முறைகளும் இருக்கின்றன.
 அவற்றை பயன்படுத்தி அறைக்குள் வெப்பம் அதிகமாக உள் இறங்குவதை தடுத்து நிறுத்தலாம். பல நிறுவனங்கள் இந்த ‘ஹீட் ரூப்பிங்’ கலவையை ரெடிமேடாக தயாரித்து விற்பனை செய்கின்றன. அதனால் மொட்டை மாடியின் மேல் தளத்தில் இக்கலவையை பூசுவது சிரமமான காரியமாக இருக்காது.
கரைசலின் அடர்த்தி தன்மை
இக்கலவையை எப்படி பூச வேண்டும் என்பது பற்றிய சில நுட்பமான விஷயங்களை தெரிந்து கொண்டால் போதும். இப்பூச்சு வேலையை எளிதாக மேற்கொள்ளலாம். மொட்டை மாடியின் மேல் தள அளவை கணக்கிட்டு இக்கலவையை வாங்க வேண்டும். ஒரு லிட்டர் கலவையை கொண்டு சுமார் 50 சதுர அடி வரையில் பூசலாம். ஆகவே முதலில் மொட்டை மாடி தளத்தின் சதுர அடி பரப்பை துல்லியமாக அளவிட வேண்டும். அதற்கு ஏற்ப இக்கரைசலை வாங்கி பயன்படுத்துவது செலவை குறைக்கும். மேலும் இக்கரைசலை தரைத்தளத்தில் பூசும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 கரைசல் எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறதோ அதற்கு ஏற்பவே பலனை எதிர்பார்க்க முடியும். ஆகையால் கரைசல் தண்ணீர் போன்று இல்லாமல் அடர்த்தியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தரைத்தளத்திலும் இடைவெளி இல்லாமல் பூச வேண்டும். அதிலும் அங்கு போடப்பட்டிருக்கும் செங்கல்களின் இணைப்பு பகுதிகளில் நன்றாக பூச வேண்டும். அப்போது தான் அந்த இடைவெளி வழியாக வெப்பம் உள் நுழைவது தடுக்கப்படும். அதை கவனிக்காமல் விட்டால் பூச்சு வேலைப்பாடு பலன் அளிக்காமல் போய்விடும். எனவே கரைசல் பூச்சு வேலையின்போது கவனமாக செயல்பட வேண்டும்.

Monday, May 12, 2014

நியூஸ்

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் கட்டாய விடுமுறை அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் முடிவு

இன்று தொடக்கக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் குறைத்தீர் முகாம் நடத்தப்படுகிறது. கடந்தாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கியதால், குறைத்தீர் முகாமில் ஆசிரியர்களால் கலந்துகொள்ள இயலவில்லை. இதனால் வரும் கல்வியாண்டு முதல், முதற் சனிக்கிழமை கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது,அதை உடனடியாக நாட்காட்டி தயாரிக்கும் உதவியாளரிடம் உடனடியாக தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு மாற்றியமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். 

மேலும் ஆங்கில வழிக் கல்வியை நிதியுதவி பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. 

கடவுச் சீட்டு பெறுவதற்கான அனுமதி நியமன அலுவலருக்கு வழங்கியதை போல், வீட்டு கட்ட முன்பணம் பெறுவதற்கான அனுமதியை நியமன அலுவலரே வழங்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தப்பட்டது. இதற்கான வழிகள் செய்யப்படும் என இயக்குநர் தெரிவித்தார். இச்சந்திப்பின் பொழுது மாநில தலைவர் மணி, தலைமை நிலைய செயலாளர் சாந்தகுமார், மாநில துணைத் தலைவர் ரக்ஷித் ஆகியோர் உடனிருந்தனர்.

B.Ed

தேர்வு அட்டவணை

       2013-2014 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு உட்பட்ட, 657 கல் லூரிகளில் பி.எட்., எம்.எட்., எம்.பில்., படிப்புகளுக்கான தேர்வு அட்டவணை

B.Ed./M.Ed./Spl.Edn., Degree Examination-May/June 2014 - Time-Table (from the academic year 2009-2010 and thereafter)

B.Ed., Degree Examination-May/June 2014 - Time-Table (from the academic year 2013-2014)


B.Ed. Spl.Edn., Degree Examination-May/June 2014 - Time-Table (from the academic year 2013-2014)

Friday, May 9, 2014

HSS PROMOTION PANEL 2014

Higher Secondary HM Promotion Panel - 2014 Now Released.


              01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல்  (அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  01 முதல் 287  முடிய மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ம் இணைந்து 01 முதல் 1080  முடிய 

              மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  01 முதல் 04  முடிய மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்  01) இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பட்டியலை, தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து  உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அந்ததந்த பள்ளியின் அறிவிப்பு பலகையில் (சூடிவiஉந  க்ஷடியசன) ஒட்டி வைக்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.  இதற்கான ஒப்புதலை சார்ந்த தலைமை ஆசிரியகளிடமிருந்து பெற்று தங்களது அலுவலக கோப்பில் வைக்குமாறும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
        மேலும், இப்பட்டியலில் இடம் பெற்ற விவரங்கள் ஏதேனும் மாறுபாடு இருப்பின்( ழுநுசூனுநுசு, னுஹகூநு டீகு க்ஷஐசுகூழ  னுஹகூநு டீகு துடீஐசூஐசூழு ) அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெயர்கள்  விடுப்பட்டிருப்பின்  அன்னாரின் விண்ணப்பத்துடன் (முதுகலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1-யாக இருப்பின் டி.ஆர்.பி-யின் தர எண்ணை டி.ஆர்.பி அலுவலகத்தில் தற்போதைய நிலையில் பெற்று) கருத்துருவை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் மேலொப்பம் மற்றும் பரிந்துரையுடன் சமர்ப்பிக்கவும், மற்றும் இம் முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள  முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் தகுதி அல்லாதோர் பெயர் சேர்க்கப்பட்டிருப்பின் அது குறித்த விவரத்தினையும் தவறாமல், இச்செயல்முறைகள் கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள் ( 16-05-2014 ) க்குள் கண்டிப்பாக தெரிவிக்கவும் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

              மேலும் இதில் ஏதேனும் கவனக்குறைவு ஏற்படும் பட்சத்தில், அவற்றிற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரே முழு பொறுப்பாவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பொறுத்தமட்டில் அவர்களின் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமை எண்-படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.  முதுகலை ஆசிரியர்களை பொறுத்தவரையில் ஆசிரியர்  தேர்வு வாரியம் மூலம் பணி வாய்ப்பு பெற்றவர்களை ஆசிரியர்  தேர்வு வாரியத்திலிருந்து தற்போது பெறப்பட்ட அவர்களின் தர எண்/ வருடத்தின் அடிப்படையிலும், தற்காலிக பணி வாய்ப்பு/பதவி உயர்வு/கருணை அடிப்படை நியமனம் பெற்றவர்களை அவர்களின் முதுகலை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நாளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது.   தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட  மூன்று ஆசிரியர்களுக்கு தர எண் இல்லாத நிலையில், அவர்களின் பதவி உயர்வு முற்றிலும் கிடைக்கப் பெறாத நிலை ஏற்படும் என்பதால், அவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, கருணையோடு பரிசீலினை செய்து, அவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், சார்ந்த ஆசிரியர்களை அவர்களின் முதுகலை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நாளின் படி, ஆண்டின் கடைசியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.  இவர்கள் தங்களின் தர எண்/ ஆண்டு ஆகிய விவரத்தினை ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து  தற்போதைய நிலையில் பெற்று  குறிப்பிட்ட நாளுக்குள் அளிக்கும் பட்சத்தில், அவர்களின் வரிசை அதன்படி மாற்றி அமைக்க பரிசீலிக்கப்படும் எனவும்.  இது சார்பான ஆதாரம் பெற்று இணைக்கப்படாத முறையீடுகள் எவையும் பரிசீலிக்க இயலாது எனத் தெரிவிக்கப்படுகிறது.  மேலும் இவ்வாறான முறையீட்டினை தங்களின் நிலையிலேயே தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆதாரம் உள்ள முறையீடுகளை உடன் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் பரிந்துரை செய்து சமர்ப்பிக்கவும் , நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது






THANKS 
PADASALAI

bill submit

கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? என்பதை அறிய...


http://treasury.tn.gov.in/Public/ecstokenno.aspx
அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா?


                         அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால்ஊதியப்பட்டியல்கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா?

                        கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதாஎந்தநாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களேஇணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.


1. www.treasury.tn.gov.in/Public/ ecstokenno.aspxஎன்ற தளத்திற்குச் செல்லவும்.
2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.
4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள்வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.(உங்கள் காசோலைப்புத்தகத்தில் பார்த்தால் தெரியும்)
5. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள்.

அவ்வளவு தான் நண்பர்களேஎந்த தேதியில் உங்கள் அலுவலர்கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்தார்எந்த தேதியில் அதுகாசாக்கப்படும் என அறியலாம்.
மேலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விபரங்களையும் அறியமுடியும்.


thanks 
PADASALAI

Thursday, May 8, 2014

HSC result

விழுக்காட்டில் வழுக்கிய விருதுநகர் – 9 அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி

 
         ஒவ்வொரு வருடமும் தேர்ச்சியில் அதிக விழுக்காடுகளைப் பெறும் விருதுநகர் மாவட்டம். ஆனால், இந்த வருடம் 9 அரசு பள்ளிகளும், 59 தனியார் பள்ளிகளும் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகளே அதிக தேர்ச்சி விழுக்காடுகளைப் பெற்றுள்ளது.
 
தேர்ச்சியை அள்ளும் பள்ளிகள்:
 
           விருதுநகர் மாவட்டத்தில் 66 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்பட தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 193 பள்ளிகள் இயங்கி வருகின்றன. பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில்தான் ஆண்டு தோறும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது.
 
தனியாருக்கு மவுசு ஜாஸ்தி:
 
              இதனால் அரசு பள்ளிகளை விட இந்த மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்குத்தான் மவுசு அதிகம். இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 28 பேர் எழுதினர். இதில் 21 ஆயிரத்து 173 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
9 அரசு பள்ளிகள்தான்:
 
         பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 68 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. இதில் 9 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
 
59 தனியார் பள்ளிகள்:
 
           59 தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.
 
பெற்றோர்கள் குமுறல்:
 
           குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்து வருகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 40 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக சம்பளம் வாங்குகின்றனர்.
 
           அரசின் பல சலுகைகளை அனுபவிக்கும் அவர்களால் அரசு பள்ளிகளில் போதிய தேர்ச்சி சதவீதத்தை ஏன் காட்ட முடியவில்லை என்று பெற்றோர்கள் குமுறுகின்றனர்.
                                                                                                         இங்கே கிளிக் செய்ய

Friday, May 2, 2014

8 exam

8ம் வகுப்பு தேர்வெழுத ஆன்லைன் விண்ணப்பம்: டிரைவிங் லைசென்ஸ் பெறாதவர்களுக்கு வாய்ப்பு

           டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாமல் தவிப்பவர்கள், நேரடியாக எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை, தேர்வுத்துறை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் பெறும் முறை, இன்று முதல் துவங்குகிறது.
 
              தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம், எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்புவோருக்கு, விண்ணப்பிக்க அட்டவனை வெளியிட்டுள்ளது. அதில், 2014ம் ஆண்டு, மே, 1ம் தேதி (நேற்று) வரை, பன்னிரண்டரை வயது பூர்த்தியானால் போதும், அவர்கள் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதலாம் என அறிவித்துள்ளது. அதனால், டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாமல் தவிக்கும் டிரைவர்கள், அந்த தேர்வை எழுதி பயனடைய தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, 75 லட்சம் லாரி உள்ளிட்ட கனரக வாகனம், 40 லட்சம் பஸ் மற்றும் டூரிஸ்ட் வாகனம், 1.6 லட்சம் கூட்ஸ் வாகனம் ஆகியவற்றில், தொழில் சார்ந்து, 15 கோடி மக்கள் உள்ளனர். மேற்கண்ட வாகனங்களை இயக்குவதில், டிரைவர்கள் முக்கியம் பெற்றவர்களாக உள்ளனர். மத்திய மோட்டார் வாகன சட்டப்பட்டி, ஒரு டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டுமானால், குறைந்தப்பட்சம் எட்டாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும். அப்போது தான், டிரைவிங் லைசென்ஸை, சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன அலு-வலர் தருவார். ஆனால், அந்த தொழிலுக்கு பெரும்பாலும் படிப்பறிவு இல்லாவதவர்களே, டிரைவர்களாக வருகின்றனர்.
 
தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
 
              எட்டாம் வகுப்பு தேர்வு எழுத விரும்புவோர், ஏற்கனவே பள்ளிப்படிப்பில் படித்த மாற்றுச்சான்று நகல் அல்லது, பிறப்புச்சான்றிதழ் நகல் என, ஏதாவது ஒன்றை சமர்பித்தால் போதும். விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்ட நோடல் சென்டருக்கு நேரில் சென்று, தேர்வுக்கட்டணம், 125 ரூபாய், ஆன்லைன் பதிவுக்கு, 50 ரூபாய் என, 175 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், 40 ரூபாய்க்கு அஞ்சல் ஸ்டாம்ப் ஒட்டிய, சுய முகவரியிட்ட உறையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இன்று முதல், வரும், 15ம் தேதி வரை, அரசு வேலை நாளில் விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால், ஆண்டுக்கு ஒருமுறை தான் நடத்தப்படும். எனவே, டிரைவிங் லைசென்ஸ் பெற விருப்பமுள்ளவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.

test

போட்டித் தேர்வு: ஜூன் மாதத்தில் கவனம் தேவை.


            போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர் களுக்கு வரும் ஜூன் மாதம் மிகவும் முக்கியமானதாகும். பல தேர்வுகள் அந்த மாதத்தில் நடக்கவிருக்கின்றன. 
 
          பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜூன் மாதத்தில் நடக்கும் என்றுஅதற்கான அறிவிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதுவரையில்,தேர்வுத் தேதி வெளியாகவில்லை. இந்த மாத இறுதிக்குள் தேதி அறிவிக்கப்படும் என்றுஎதிர் பார்க்கப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வு ஜூன் 8ம் தேதி நடைபெறுகிறது. 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ) பணியிடங்களை நிரப்புவதற் கான தேர்வு ஜூன் 14ம் தேதி நடக்கப் போகிறது.

         தேர்தல் நடந்த காரணத்தால் தள்ளிப் போடப்பட்ட டி.என். பி.எஸ்.சி. குரூப் - 2தேர்வு 29 ஆம் தேதி நடக்கிறது. மத்திய ரிசர்வ் போலீஸ் படைகளில் 2 ஆயிரத்து892 இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய பணிகளை நிரப்புவதற்கான தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டதாகும்.அதன் முதல் தாள் தேர்வு ஜூன் 14 ஆம் தேதியன்று நடைபெற வுள்ளது. வன உயிரின ஆராய்ச்சிக் கல்லூரியில் ஆய்வுப் பணிக்கான தேர்வு இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.ரயில்வே தேர்வாணையம் நடத்தும் டெக்னீசியன் மற்றும் லோகோ பைலட் பணிகளுக்கான தேர்வு 15 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. பொதுத்தறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கழகத்தில் உதவி செயற்பொறியாளர் பணியிடத்திற்கான தேர்வு 22ம் தேதியன்று நடக்கிறது.

          மேலும் பல்வேறு துறைகளில், குறைவான எண்ணிக்கையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான பல தேர்வுகள் இதே மாதத்தில் நடக்கப் போகின்றன.இவ்வாறு தேர்தல் நெருங்கிய காரணத்தால் தள்ளிப்போடப்பட்ட பல தேர்வுகள் ஒரே மாதத்தில் நடைபெறுகின்றன. சில தேர்வுகள் ஒரே நாளில் இருக்கக் கூடும். அவ்வாறு தாங்கள் விண்ணப்பித்திருந்த இரண்டு பணியிடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடந்தால், எந்தத் தேர்வை நாம் எழுதுவது என்பதை முதலிலேயே தீர்மானித்துக்கொள்வது நல்லது.விரிவுரையாளருக்கானநெட் தேர்வுபல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றுவதற்கு, தாங்கள் படித்த முதுநிலைப்பட்டத்தோடு, தேசிய தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

            இது பல்கலைக்கழக மானியக்குழுவால் ஒவ்வொரு ஆண்டும் இரண்டுமுறை நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் ஜூன் மாதம் 29ம் தேதி இந்தத் தேர்வு நடக்கவிருக்கிறது.ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப இயலும். விண்ணப்பிப்பதற்கான வசதியும், இந்தத் தேர்வு குறித்த மற்ற விபரங்களும் றறற.ரபஉநேவடிடேiநே.in என்ற இணையதளத்தில் தரப்பட்டிருக்கிறது. ஆன் லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 5ம் தேதி யாகும்.

              யூனியன் வங்கியில்முன்னாள் ராணுவத்தினருக்கு வேலைவாய்ப்பு பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் 40 பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் கணினிப் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.அதோடு, முப்படைகள் அல்லது துணை ராணுவப் படைகள் அல்லது காவல்துறை ஆகியவற்றில் ஒன் றிலாவது குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.றறற.ரniடிnயெமேடிகiனேயை.உடி.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு கடைசித்தேதி மே 5ம் தேதியாகும். இதற்கான தேர்வு ஜூன் மாதம் நடக்கப் போகிறது.