Saturday, July 16, 2016

Transfer form AND Spouse certificate

தொடக்ககல்விதுறை  மாறுதல் விண்ணப்பம் 

        தொடக்ககல்விதுறை  மாறுதல் விண்ணப்பம்  பெற இங்கே கிளிக் செய்யவும்
                                                               மாறுதல் விண்ணப்பம்
SPOUSE CERTIFICATE

           தொடக்ககல்விதுறை  SPOUSE CERTIFICATE பெற இங்கே கிளிக் செய்யவும்

                                                                    SPOUSE CERTIFICATE


pallikudamnews

தொடக்க கல்வித்துறை:ஆசிரியர்கள் பொது கலந்தாய்வு அட்டவணை 2016-17 - தொடக்க கல்வித்துறை PROCEEDINGS

DEE - Transfer Counselling & Schedule GO (Primary & Middle Schools)
  • DEE - Transfer Counselling Schedule 2016-17
  • DEE - Proceedings for Transfer Counselling 2016-17 
  • DEE - New Transfer Applications 2016-17
  • Transfer GO 258: Date: 06.07.2016 -- Norms for Teachers Transfer
  • Highlights of Transfer Norms 2016
 

pallikudamnews

பள்ளிக்கல்வித்துறை:ஆசிரியர்கள் பொது கலந்தாய்வு அட்டவணை 2016-17 - பள்ளிக்கல்வித்துறை PROCEEDINGS

DSE - Transfer Counselling Schedule  & GO
 (High & Higher Secondary Schools) 
  • DSE - Transfer Counselling Schedule 2016-17
  • DSE - Proceedings for Transfer Counselling 2016-17 
  • DSE - New Transfer Applications 2016-17 
  • Transfer GO 258: Date: 06.07.2016 -- Norms for Teachers Transfer 
  • Highlights of Transfer Norms 2016

Monday, July 11, 2016

pallikudamnews

மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால் ஆசிரியருக்கு "மெமோ" - இணை இயக்குனர் எச்சரிக்கை

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சரியாக படிக்காவிட்டால், புத்தகத்தில் உள்ளதை வாசிக்கத் தெரியாவிட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து கல்வித் துறை இணை இயக்குநர் பாலமுருகன் கூறியதாவது:
கடந்த ஆண்டு கூட்டத்தில், தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக அதிக தேர்ச்சியை வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், அத்தனையும் தேர்தல் வாக்குறுதிகளாக மாறி விட்டது. தமிழகத்தில், தேர்ட்சியளவில் சேலம் மாவட்டம், 19-வது இடத்தில் உள்ளது.தேர்ச்சியை அதிகரிக்க பல மாற்றங்களை அறிவுறுத்தினோம். அதை, ஆசிரியர்கள் யாரும் பின்பற்றவில்லை. அன்பாக கூறி கேட்கவில்லை என்பதால், அடுத்து நடவடிக்கையில் இறங்க வேண்டியதுதான்.

உங்களிடம் வரும் மாணவனை, 100 சதவீத மதிப்பெண் எடுக்ககட்டாயப்படுத்தவில்லை. 35 சதவீத மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற வைக்க கூறுகிறோம். அதை கூட நிறைவேற்ற முடியவில்லை. அரசு பள்ளிகளில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், இடைநிற்றல் வரக்கூடாது என்பதற்காக, ஆல் பாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால்,ஆசிரியர்கள் மாணவர்கள் படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி என்று விட்டு விட்டனர்.ஆல் பாஸ் என்பதற்க்காக ஆசிரியர்கள் யாரையும் கற்பிக்க வேண்டாம் என கூறவில்லை. இவ்வாண்டு ஆகஸ்ட் வரை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு மேல், ஆய்வின்போது, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால், அந்த ஆசிரியருக்கு உடனடியாக, மெமோ வழங்கப்படும்.அதேபோல, பள்ளியிலுள்ள வகுப்பறையை ஆர்வத்துடன் சுத்தமாக வைத்திருப்பதை ஆசிரியர்கள் முதல் கடமையாக நினைக்க வேண்டும். அதேபோல், தன் அறையில் அமர்ந்திருப்பது மட்டும் தலைமை ஆசிரியர் பணியல்ல. காலை இரு வகுப்புகள், மாலை இரு வகுப்புகளை கண்காணித்து, அந்த ஆசிரியர் நடத்தும் கற்பித்தல் முறையில் குறை இருப்பின் அதை சுட்டிக்காட்டி ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறையில் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

pallikudamnews

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்ய...

*புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016*
பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://tnnhis2016.com/TNEMPLOYEE/EmpECard.aspx
*பயனர்எண் :*
பழைய காப்பீட்டு அடையாள அட்டை எண். (எண் & எழுத்துகள் அடங்கிய 23 உறுப்புகள் உடையது)
*கடவுச்சொல் :*
பிறந்த தேதி

pallikudamnews

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல்.

*ஆசிரியர்கள் பணியிட  மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.
*கலந்தாய்வு அரசாணை மற்றும் விதிமுறைகள் தயார்நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் எனத்தெரிகிறது.
*வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்படும் ஆசிரியர்கள் அங்கு 6 ஆண்டுகள் கட்டாயம் பணி புரிய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை  தகவல்.
*கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முழுமயைாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல்.
*30-09-2015 ன் படி உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்மேற்காெள்ளுதல்.
* பணி நிரவல் *
*பள்ளிக்கல்வித் துறையில் மாநில அளவில் பணிநிரவல் நடைபெறும்.தொடக்கக்கல்வித் துறையில் குறைந்தபட்சம் மாவட்டம் அளவில் பணிநிரவல் நடைபெறும்.
*சென்ற கலந்தாய்வில் இடமாறுதல் பெற்றவர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது.