Friday, December 29, 2017

Pallikudam EMIS

Emis
D
📲Emis  1 St STD never enroll schools must enroll in EMIS.
📲Emis adhaar seeding update should complete without fail.
📲Emis apps now working.... re-check and confirm all children details verify and your self...you are the one will response for any mistakes (concern teachers and HM )
1.Adhaar seeding must
2.update blood group
3.photo should be clear and background must be blue and white
4.1st STD 2017 admission 0 enroll (numbers) school    HMS should give certificate to aeeos, aeeos should submit the detailed report to deeo's office.
📸Avoid blur photos and dull photo's
📲photos should take with good clearity cameras
💫Update all the details before 2018 January 5.

Wednesday, December 13, 2017

Pallikudam

அறம்


இறை பழித்தோர் உண்டு
             அறம் பழித்தோர் இல்லை
                                          -என்பது கூற்று
               தமிழ்மொழியின் ஒரு நுட்பமான சொல் அறம்,அதனை பிறருக்குஉதவி,ஒழுக்கம்,நற்செயல்,நன்னடத்தை,நன்கொடை,போன்ற பல பொருள் கொள்ளலாம்.   தன்னலமில்லாத பொதுவான நன்மையின்,நற்செயலின் பொருட்டு செய்யப்படும் அனைத்தும் “அறம்” ஆகும்.
            பலபேர் கூடிவாழ்கின்ற சமூதாயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒருசில சமூக கடமைகள் உண்டு, நாம் நம்மை தனிமனிதனாக சிந்திக்க ஆரம்பித்தால் சமுதாயம் உடைந்துபோகும. ஒருசிலஅறம் சமுதாயத்திற்கும்,ஒருசிலஅறம் தனிமனித வாழ்கைக்கும் உண்டு. திருக்குறளில் தனிமனித அறத்தையும், சமூக அறத்தையும் திருவள்ளுவர் மிக அற்புதமாக எடுத்துறைக்கிறார். தனிமனிதனுடைய “தகுதி “ அவனது அறம்சார் வாழ்க்கையை பொருத்தே அமையும்.தனிமனித அறம் காக்கப்படும்போது சமூக அறம் நிலைநாட்டப்படுகிறது.
            உலக நாடுகளைக்காட்டிலும் நம்இந்திய திருநாடு அமைதியாக இருக்க மிகப்பெரிய காரணம் நம் மக்களின் அறச்சிந்தனைகளே ஆகும். தமிழர்களின் பண்பாடு அறம் சார்ந்து அமைந்திருந்ததாலே இன்றும் பெருமிதத்துடன் நிலைத்து நிற்கிறது.
அறம் வழுதலின் காரணமே இன்று நாட்டிலும் தனிமனித வாழ்விலும் பல இன்னல்கள் தலைதூக்கி நிற்கின்றன. எஞ்சி நிற்கும் அறமே நம்மை காக்கின்றது,
அறத்தை பேணிக்காப்பதற்கே மதங்கள் தோன்றின,அறத்தினை மக்களிடம் வலியுறுத்தவே அவை போதிக்கப்பட்டன. திருக்குறள் உள்ளிட்ட அனைத்து  நீதிநூல்களும்,இதிகாசங்களும்,இலக்கியங்களும் அறத்தை முதன்மையாக கொண்டே இயற்றப்பட்டன.
தமிழர்களின் குடும்பங்களின் வாழ்வியல் முறை அறத்தினை பிரதானமாக கொண்டே அமைந்துள்ளது.  நமது முன்னோர்களின் அறசார்  கருத்துக்களை கடைபிடிப்பத்தின்  வாயிலாகவும் “அறத்தை இழந்தால் இழிவு” “பிழை செய்வோரை  அறம் கொல்லும்“என்பது போன்ற ஆழ்ந்த சிந்தனைகளை குழந்தைகளுக்கு சிறுவயது முதலே விதைத்தோமானால்  நாளைய சமூகம் “சீர்மிகு சமுதாயமாக உருபெரும் என்பது திண்ணம்.
இயற்கையை நேசிப்பதே வாழ்க்கையின் அறம்
அறமே உலகின் அரண்.



                                    சீனி.சங்கரநாராயணன்,                                                                                                                      எம்.எஸ்சி.,எம்.பில்.,எம்.காம்.,பி.எட்.டி.டி.எட்.,
                                    பட்டதாரி ஆசிரியர்,
                                    செஞ்சி.     9442224436

Monday, November 20, 2017

Pallikudam

நல்ல நண்பன்

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது. 

தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான். நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார்.

ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது. நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார். 

“நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.

“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங். 

அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.

“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.

“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.

“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம். என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன். 

அவன், அவனது தந்தையாகிய உங்களை போல் பரந்த மனது கொண்டிருந்தால், பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார். 

இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.

விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான். லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் புகழும் பெனிசிலின் கண்டுபிடித்த *சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் ஆனார்.*

வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.

அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். 

அவரது பிள்ளை?

சர் வின்ஸ்டன் சர்ச்சில்!

தினை விதைத்தவன் தினை அறுப்பான். நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.

வாழ்க்கையில்,

* பணம் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணத்தைக் கைவிடு.

யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்

யாரும் உன்னை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு

யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு

சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்

உன் கைகளில் எப்போதும் செய்வதற்கு வேலை இருக்கட்டும்

உன் பணப்பையில் எப்போதும் ஒன்றிரண்டு காசுகள் இருக்கட்டும்

உன் ஜன்னலில் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்

ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்

👏🏻👏🏻👏🏻🤝 எப்போதும் நண்பன் ஒருவனின் கைகள் உனக்கருகில் இருக்கட்டும்

Monday, October 23, 2017

Pallikudamnews

புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்!

பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் நிலவிய மனப்பான்மையை பின்பற்றும் வகையிலான கல்வி முறையை திருத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இப்புதிய கல்விக் கொள்கை, டிசம்பரில் வெளியிடப்படும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர், சத்யபால் சிங் கூறியுள்ளார்.

கேரள மாநிலத் தலைநகர், திருவனந்தபுரத்தில் நேற்று, தேசிய கல்வியாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்து, அமைச்சர், சத்யபால் சிங் கூறியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற பின், பெரும்பாலான கல்வியாளர்கள், துரதிருஷ்டவசமாக, பிரிட்டிஷ் ஆட்சி கால மனப்பான்மையை பிரதி பலிக்கும் வகையிலான கல்விக் கொள்கையை பின்பற்றினர்; இந்திய கலாசாரத்தை புறக்கணித்து, கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது.
பிரிட்டிஷ் கால மனப்பான்மையிலிருந்து, கல்வியை விடுவிப்பது, அரசுக்கு பெரிய சவாலாக உள்ளது. கல்வித் துறையில், உலக நாடுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், நாம் முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது.
அதற்கேற்ப, ஆரம்ப நிலையில், கல்வித் தரம் உயர்த்துதல், உயர் கல்வியை எளிதில் கிடைக்கச் செய்தல், அதிக மக்களுக்கு, கல்வி கிடைக்கச் செய்தல் ஆகிய மூன்று முக்கிய பிரச்னைகளுக்கு, தீர்வு காணப்பட வேண்டும்.

ஆலோசனை

மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கி, புதிய கல்வி முறையை உருவாக்கும் வகையில், பல கட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. தற்போது, இறுதிக்கட்ட ஆலோசனைக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. வரும் டிசம்பரில், நாட்டின் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்படும்.

சிறந்த கல்வி பெறுவதற்காக, நம் நாட்டைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றும் வகையில், சர்வதேச நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நிகரான கல்வி மையங்கள், இந்தியாவில்
உருவாக்கப்பட வேண்டும்.
இந்தியாவில், உயர் கல்வி கிடைக்கும் விகிதம், 25.6 சதவீதம். அமெரிக்காவில், இது, 86 சதவீதமாகவும், ஜெர்மனியில், 80 சதவீதமாகவும், சீனாவில், 60 சதவீதமாகவும் உள்ளது. எனவே, உயர் கல்வியை மேம்படுத்த, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உயர் கல்வி பெற, அதிக செலவு செய்ய வேண்டிய நிலை, நம் நாட்டில் உள்ளது. இதை மாற்றி, அனைவருக்கும், சிறந்த உயர் கல்வி கிடைக்கும் நிலை உருவாக வேண்டும்.

பல்கலைகளில், 50 சதவீத ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன. டில்லி பல்கலையில், 4,000 பணி இடங்கள் காலியாக உள்ளன. ஆண்டுதோறும், 40 ஆயிரம் பேர், முனைவர் பட்டம்
பெறுகின்றனர்.

பெரியளவில் மாற்றங்கள்

இது, உலக பொருளாதாரத்துக்கு, 0.2 சதவீத பங்களிப்பை மட்டுமே அளிக்கிறது. நாடுமுழுவதும், ஆய்வுப் படிப்புகளில், பெரியளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கஸ்துாரி ரங்கன் தலைமையில் குழு

நாட்டின் புதிய கல்விக் கொள்கையை தயாரிப் பதற்காக, ஒன்பது பேர் அடங்கிய குழு, பிரபல விஞ்ஞானி, கஸ்துாரி ரங்கன் தலைமையில் சமீபத்தில் அமைக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை வரைவை உருவாக்கி, அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால வரம்பு நிர்ணயிக்க ப்படவில்லை.

முதல் சுதந்திர போர் நடந்தது எங்கே?

ஒடிசாவைச் சேர்ந்த, பைகா விவசாயிகள் படையினர், 1817ல், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டம், நாட்டின் விடுதலைக்காக நிகழ்த்தப்பட்ட முதல் சுதந்திர போராட்டமாக அறிவிக்கப்பட உள்ளது.
ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் நேற்று, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: ஒடிசாவில் ஆட்சி செய்து வந்த, கஜபதி மன்னர்களின் கீழ், பைகா விவசாயிகள் படை இருந்து வந்தது. இவர்கள், 1817ல், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போர்களை நடத்தினர். இந்த போர், பைகா புரட்சி என்ற பெயரில், வெள்ளையர்களுக்கு எதிரான, முதல் சுதந்திர போராக கருதப்படுகிறது. இந்த வரலாற்று உண்மை, நாடு முழுவதும், வரலாற்று புத்தககங்களில் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Monday, September 25, 2017

Pallikudam

தமிழ்நாட்டில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும் செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் அமைந்துள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.

Thursday, September 21, 2017

Pallikudam

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவர் கட்சியாக சென்ற வருடம் இந்த நாளில் தான் தனது கடைசி அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தமிழக அரசியலில் ஜெயலலிதா என்ற பெண் சிங்கம் மிகப்பெரிய இடத்தை ஆக்ரமித்து வைத்திருந்தார். அவரது அதிமுக கட்சியை பாராளுமன்றத்தில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக உயர்த்தினார். எம்ஜிஆருக்கு பின்னர் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார் ஜெயலலிதா.

அம்மா உணவகம், அம்மா குடிநீர் திட்டம், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம், மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கும் திட்டம், இலவச, மின்விசிறி, மிக்சி, ஆடு, மாடு வழங்கும் திட்டம் என பல்வேறு மக்கள் நல திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர் ஜெயலலிதா.

அவரது கண் அசைவிற்கும், கட்டளைகளுக்கும் அத்தனை சக்தி உண்டு. சக்தி வாய்ந்த பெண் அரசியல்வாதியாக சிங்கம் போல வலம் வந்தார் ஜெயலலிதா. தனது அரசியல் வரலாற்றில் யாரும் செல்லாத உச்சத்திற்கு சென்று கொண்டிருந்த ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பர் 22-ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் சென்ற வருடம் இதே நாள் செப்டம்பர் 21-ஆம் தேதி சென்னையில் மெட்ரோ பயணிகள் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதுவே அவர் கடைசியாக மக்கள் மத்தியில் உயிரோடு தோன்றிய நாள் ஆகும்.

அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவ போராட்டத்துக்கு பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இந்த இடைப்பட்ட நாட்களில் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை.

இதனால் ஜெயலலிதாவை கடைசியாக பார்த்த இந்த தினத்தை அவரது அபிமானிகள் சோகத்துடன் சமூக வலைதளங்களில் அனுசரிக்கின்றனர். தமிழக அரசியலில் தனக்கென ஒரு சகாப்தத்தை உருவாக்கிய ஜெயலலிதா விட்டுச்சென்ற இடத்தை ஒரு வருடம் ஆகியும் இதுவரை யாரும் நிரப்பவில்லை.

Wednesday, September 20, 2017

Pallikudam

DEEO meeting news:
1. பள்ளி திறக்கும் நாளில் இலவச பாட புத்தகம், நோட்டுகள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

2. பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து, இடிக்க, சரி செய்ய வேண்டியவைகளை BDO  ற்கு தெரியபடுத்தவும்.

3. டெங்கு காய்ச்சல் பற்றி அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

4. ஆபத்தான புளுவேல் விளையாட்டை பற்றி அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

5. பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல்  பணியாற்றிவரும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் , 31.3.2019 குள் NIOS exam pass செய்ய வேண்டும். இல்லை எனில் அன்று முதல் பணி இழக்க நேரிடும். உடனடியாக தலைமை ஆசிரியர்கள், இ. ஆ. தங்களின் +2 சான்றிதழ் சரிபார்க்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

6. NAS தேர்வு 3,5,8 வகுப்புகளுக்கு இவ்வருடம் அக்டோபர் மாதத்தில் நடைபெறும். அதற்கு மாணவர்களை தயாரிப்பு செய்ய வேண்டும்.

  7. அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் இருக்க வேண்டும்.  அதற்கு ஏற்பாடுகள்​செய்ய வேண்டும்.

8. SMART CLASS தொடக்க நிலையில்4 மற்றும், நடுநிலைப்பள்ளிகளில்​3ம்,  ஆரம்பிக்கப்படும்.

9. அறிவியல் கண்காட்சி வட்டார​அளவில் அனைத்து பள்ளிகளும் கலந்துகொண்டு​ சிறப்பாக அமைய வேண்டும். அதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஆர்வத்துடன் செயல் பட வேண்டும்.

10. தூய்மை இந்தியா உறுதிமொழி அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டும்.

Pallikudam

EMIS செய்ய வேண்டிய பணி

User name: dise code
Password: ssa officeல் பெறப்பட்டது
Google - emis - tnschool education department -
Enter your school username & password பின்பு SIGN IN யை கிளிக் செய்க.
Step 1:
Dashboardல்
School email: உபயோகத்தில்​ உள்ளதாக இருக்கனும்
School mobile: HM mobile no கொடுத்தவுடன்      save மை கிளிக் செய்யவும்.
Step 2 :
Save மை கிளிக் செய்தவுடன் அடுத்ததாக
Reset password பக்கத்திற்கு செல்லும். அதில் change passwordற்க்கு கீழ்
Old password: ssa given
New password: தற்போது புதியதாக உருவாக்குக. அது capital letter, small letter, special character, numerical உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் (அ) கடந்த ஆண்டு password யை கொடுக்கவும்
Conform password: new password கலத்தில் உள்ளதை type செய்க
Submitயை கிளிக் செய்யவும்.
Step 3:
Student list - student profile (கிளிக் செய்யவும்) - student list class wise & over all strength display ஆகும். அதில் வகுப்பின் மீது கிளிக் செய்யவும் student list section wise தோன்றும். அதில் section A என்பதன் மீது கிளிக் செய்யவும். All student list (in particular class) தோன்றும். இந்த பக்கத்தில் வலது புறம் print , PDF, CSV  என்று இருக்கும் icon யை பயன்படுத்தி print எடுத்தோ (அ) மாணவர்கள் வருகை பதிவேட்டினை கையில் வைத்துக் கொண்டோ
EMIS SITE ல் உள்ள மாணவர்கள் - பதிவேட்டில் உள்ளனரா? என சரி பார்க்கவும்.
அவ்வாறு பார்க்கும் போது தற்போது தங்கள் பள்ளியிலிருந்து left ஆன மாணவர் EMIS site ல் இருப்பின் அம்மாணவரின் பெயர் மீது கிளிக் செய்யவும். தற்போது profile (particular student's) தோன்றும்.
வலதுபுறம் edit / transfer என்று இருக்கும். அதில் TRANSFER யை கிளிக் செய்யவும். பின்பு are you sure? என்பதற்கு yes transfer என்பதை கிளிக் செய்யவும். தவறுதலாக transfer செய்து விட்டால் அப்பக்கத்தை விட்டு வெளியேறும் முன் திரும்ப admit செய்யவும் முடியும். (Transfer செய்து விட்டு திரும்ப class wise student list யை பார்த்தால் மாணவர் எண்ணிக்கை குறைந்து விடும்)
தற்போது TRANSFER பணி மட்டுமே செய்ய வேண்டி உள்ளது.

Pallikudam

அடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு

     அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், பணியில் இருக்கும் போது, தங்களுடைய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் துறை செயலர், ஸ்வர்ணா, அனைத்து துறை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:
கடந்த, 2004 டிச., 1ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, அரசு பணியாளர்கள் அனைவரும், அலுவலக நேரத்தில், அவர்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, தவறாமல் அணிய வேண்டும் என, 2013ல் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அரசு பணியாளர்கள், அலுவலக நேரங்களில், அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளன.

எனவே, அரசு ஊழியர்கள் அனைவரும், அரசாணையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். துறையின் செயலர்கள், கலெக்டர்கள், இது தொடர்பாக தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.அதே போல, ஆசிரியர்களும், பள்ளிகளில் அடையாள அட்டை அணிந்து பணிபுரியும்படி, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Thursday, September 14, 2017

Pallikudam Trs

அவ்வளவு என்ன  தான் செய்கிறார்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?  உண்மையில் என்ன தான் செய்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?

பொதுவான பார்வையில்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றால்
அதிக சம்பளம் வாங்குபவர்கள்,
இன்னும் சிலவும்...

உண்மை நிலை என்பதும் இது தானா?
வாருங்கள், ஒரு ஆய்வு செய்து பார்ப்போம்...

பள்ளிக்கு அருகிலேயே இல்லமிருப்பவர்கள் இருந்தாலும், 100 கி.மீ முதல் 200 கி.மீ முதல் தினமும் பயணம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஓரிருவர் நேரம் தவறி பள்ளிக்குச் சென்றாலும் பெரும்பான்மையானோர் 98% சரியான நேரத்தில் பள்ளிக்குச் சென்று, இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களை ஒழுங்குபட வரிசைகளில் நிற்க வைப்பதில் தொடங்குகிறது இவர்களின் வேலை...

பள்ளி வளாகத்தினுள்ளும், பள்ளி வகுப்பறைகளிலும் குப்பைகள் இல்லாதவாறு அவற்றை அப்புறப்படுத்தி 'தன்' பள்ளியெனும் எண்ணத்துடன் அந்த நாளினைத் தொடங்குகின்றனர்.

வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்னரே அன்றைய நாளில் மாணவர்களுக்கு குடிநீர் இருப்பையும், கழிவறையில் நீர் இருப்பையும், அவர்களுக்கு சமையல் செய்யவும், சாப்பிட்ட பின் மாணவர்கள் கை கழுவவும் தண்ணீரின் இருப்பை கிடைக்குமாறு செய்து அந்த நாளை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்குமாறு உறுதி செய்துகொள்கின்றனர்.

இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் நிற்கும் போதே யார் குளித்தது, யார் தலை வாரியது, யார் பல் துலக்கியது, யார் நகம் வெட்டியது, யார் கிழிந்த ஆடைகளை அணிந்திருப்பது, யார் துவைக்காத அழுக்கான ஆடைகளை அணிந்திருப்பது எனவும் கண்காணித்து அவற்றை முறைப்படுத்தவும் செய்கின்றனர்.

வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் மாணவர்களின் மனநிலைகளையும், உடல்நிலைகளையும் அவர்கள் முகத்தினை வைத்தே தீர்மானிக்கின்றனர். நாம் நினைப்பது போல நம் வீட்டிலுள்ளது போலவே அந்த குழந்தைகளின் வீட்டிலும் நிலை உள்ளதாக நினைத்துக்கொள்ளக்கூடாது !
குடித்து விட்டு சண்டை போடும் தந்தை, வேலைக்கே செல்லாத தந்தை, தந்தையை நிம்மதியாய் இருக்கவிடாத தாய், தாய்-பாட்டி சண்டைகள், சில இடங்களில் நாகரீகமற்ற தவறான பழக்கம் கொண்ட சில தாய், தந்தையரும் உண்டு ! இதுவுமல்லாமல் மாடு மேய்த்துவிட்டும், ஆடு மேய்த்துவிட்டும், சுள்ளி பொறுக்கிவிட்டும், விறகு வெட்டிவிட்டும், சுமை சுமந்து பல தூரம் அதைக் கொண்டு சென்ற பின் பள்ளிக்கு வரும் மாணவர்களும் இன்னும் உள்ளனர்.

இப்படி பல்வேறு சூழல்களிலிருந்து வரும் குழந்தைகளை அவர்களின் முகத்தினை வைத்தே புரிந்துகொள்வதென்பது அந்த ஆசிரியர்களுக்கே உண்டான திறமை.

சில நேரங்களில் சில குழந்தைகள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே கிடப்பதும், அவர்களின் பெற்றோரும் அவற்றை கண்டுகொள்ளாமலிருப்பதும் அரங்கேறும்.

தனியார் பள்ளியிலிருந்து கட்டணக்கொள்ளையால் தன் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்த பெற்றோரின் மனசாட்சிக்குத் தெரியும், தனியார் பள்ளியில் தன் பிள்ளையை படிக்க வைத்தபோது பெற்றோருக்கு இருந்த அந்த கண்காணிப்பு என்பது அரசுப்பள்ளியில் சேர்த்தவுடன் மாயமாக ஆகிப்போகிறது. விலையில்லாமல் அளிக்கப்படும் எதற்குமே மதிப்பில்லை என்பது இங்கு மிகச்சரியாக பொருந்துகிறது.

அன்று பள்ளிக்கு வராத மாணவர்களை வர வைக்க, சில ஆசிரியர்கள் தொலைபேசி மூலமாகவும் அல்லது மாணவர்களிடம் விசாரித்தும் அந்த சரியான காரணத்தை உறுதி செய்துகொள்கின்றனர்.

பசியில் இருக்கும்போது காதுகள் கேட்காதென்பது யாவரும் அறிந்ததே, சில மாணவர்கள் தினமும் பசியோடே பள்ளிக்கு வருவர். அந்த பழக்கத்தினை மாற்றவும் தங்களால் ஆன முயற்சியினை மேற்கொள்கின்றனர்.

வகுப்பிற்கு முன்னரே கரும்பலகையில் தேதியையும், கிழமையையும் எழுதியவுடனேயே அங்ங்ங்கு தொடங்க்குகிறது பதிவேடுகளின் பங்களிப்பு.
சிலர் விக்கிரமாதித்தனின் முதுகில் ஏறிக்கொண்டதைப் போலவே இந்த பதிவேடுகளைக் கண்டு கவலையுறுகின்றனர்.
ஏன் அப்படி ஒரு கலக்கம் இந்த ஆசிரியர்களுக்கு?
ஆம். கலக்கமுறத்தான் செய்வார்கள். ஏனெனில் அவற்றின் எண்ணிக்கைகளும், அவற்றில் இடம்பெற வேண்டிய தகவல்களின் எண்ணிக்கையும் எக்கச்சக்கம்.
தோராயமாக பள்ளியிலும், வகுப்புகளிலும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் அறுபதைத் தாண்டும் என்பது சிலரின் கருத்து ! ! !

இத்தனையையும் தாண்டி வகுப்பு எடுக்கலாமென்றால் இந்த முறையில் தான் வகுப்பு எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. மாணவர்களின் இருப்பிட அமைவிடத்தைப் பொருத்தும், அவர்களின் மனநிலையையும், பழக்க வழக்கங்களைப் பொருத்தும் வாழ்வியல் முறைகளைப் பொருத்தும் அவர்களுக்கு பயிற்றுவிக்கும் முறைகள் பற்றியும் அக்குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு மட்டுமே மிகச்சரியாக தெரியும்.  இது இடத்திற்கு இடம் மாறுபடும்.

அதையும் கடந்து வகுப்பு எடுக்க ஆரம்பித்து மாணவர்களின் மனநிலையை ஒருங்கிணைத்து எடுத்துக்கொண்டே இருக்கும் போதே, நூறு நாள் வேலைத் திட்டத்திலோ அல்லது வேறு ஏதேனும் வேலைக்குச் செல்லும் பெண்மணி ஒருவர் திடீரென நேராக வகுப்பினில் ''இந்தாடா, அம்மா வேலைக்கி போறன், பாப்பாவ புட்சிக்கோ '' என்று மொத்த மாணவர்களின் கவனத்தையும் ஒரேயொரு நொடியில் பஸ்பமாக்கி விட்டு சென்றுவிடுவார். அவர் நகர்ந்த அடுத்த நொடி அந்த குழந்தை எந்தளவு பீறிட்டு அழும் என்பதும், அதைச் சமாதானப்படுத்தி மீண்டும் வகுப்பில் மாணவர்களின் கவனத்தைக் கொண்டு வருவதென்பது அவ்வளவு சாதாரணமான செயல் அல்ல.

வீட்டில் வேலை இருந்ததாலும், பெற்றோரின் கவனமின்மையினாலும் சில/பல பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதாமலும், நடத்திய பாடத்தினை படிக்காமலும் திருதிருவென முழித்துக்கொண்டு அமர்ந்திருப்பர். இவர்களை எப்படி சமாளிப்பதென்றும் புரியாமலும், பெற்றோரை அழைத்து வர பல முறை சொல்லியனுப்பிய பின் நேரில் வரும் பெற்றோர்களிடத்தில் எதைச் சொன்னாலும், தன் பிள்ளை, அவன் கல்வி என்னும் எண்ணமேயில்லாமல் ஒரு பதில் வரும். இப்போது அந்த ஆசிரியர் திருதிருவென முழிப்பதை நம்மால் பார்க்க இயலும்.

சில மாணவர்களின் தவறான செயல்களுக்காக அவர்களைத் திட்டவோ, அடிக்கவோ அல்லது அவர்களின் மனம் நோகும்படியோ நடக்கக்கூடாதென்பது ஆணை. எந்தளவு உங்களால் பொறுத்துக்கொள்ள முடியுமென நினைக்கிறீர்கள்? எனக்கெப்படி தெரியும்? நான் என்ன ஆசிரியரா? என்கிறீர்களா? குறைந்தபட்சம் ஐந்தே ஐந்து பிள்ளைகளை ஒரே அறையில் உங்களுடன் அமர வைத்து அவர்களின் கையில் புத்தகத்தைக் கொடுத்து டி.வியோ மொபைல் போனோ இல்லாமல், அவர்களுக்கு எந்தவித கண்டிப்பும் இன்றி அவர்களை படிக்கவும் வைத்து ஒரு நாளை கடத்திப் பார்த்தோமானால் நாம் யாரைப் பற்றி எவ்வளவு எளிதாக பேசிவிட்டோம் என்பதை நாம் உணர்ந்துவிடுவோம்.

இது இப்படியிருக்க, ஒரே அறையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் பல வகுப்பு மாணவர்களை வைத்துக் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அதே ஆசிரியர் ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்துவது என்பது, அதைப் பார்ப்பவர்களுக்கு சிரிப்பாகவும், அதைப் புரிபவர்க்கு சவாலாகவும் இருக்கும்.

காலை நேர வகுப்புகள் முடிந்தவுடன் மதிய உணவு இடைவேளைக்கு யார் கை கழுவாமலும், தட்டு கழுவாமலும் வருகிறார்கள் என்பதையும் ஒவ்வொருவராக கூர்ந்து கவனிக்கிறார்கள். இதைக்கூடவா கவனிக்க வேண்டும், நம்பும்படியாகவா உள்ளது எனக் கேட்பவர்கள் நிதர்சனம் புரியாதவர்கள் என்பதில் ஐயமேதுமில்லை. ஆம். அதைக்கூட கற்றுத்தராத பெற்றோரும் இருக்கவே செய்கின்றனர்.

உணவை மட்டுமே சுகாதாரமாக உண்ண சொல்லித் தருகிறார்களா? அல்ல. கழிவறைப் பயன்பாடும், கழிவறைச் சுத்தமும், கழிவறைகுச் சென்று வந்த பின் மாணவர்கள் கை, கால்களை சுத்தப்படுத்துவது முதல் இந்த ஆசிரியர்கள் சொல்லித்ததுகின்றனர் என்பதே நம்மை ஆச்சர்யப்படுத்தும் எதார்த்தம் !

நாமெல்லாம் லேப்டாப், ஸ்மார்ட் போன், LED TV என உயரப்பறந்துகொண்டிருக்கும்  போது இவற்றையெல்லாம் நம்ப நமக்கு சற்று கடினமாகவே இருக்கும். இரட்டைத் தந்தையுடனோ அல்லது இரட்டைத் தாயுடனோ கூட சில குழந்தைகள் இருக்கலாம், அவர்களின் மனநிலையை சற்றே யோசித்துப் பார்த்தால் நமக்கு மனம் கலங்கவே செய்யும்.

சரி. எல்லாம் முடிந்து மீண்டும் மதிய வகுப்புகள் தொடங்கி கவனம் ஈர்க்கப்பட்ட நேரம் திடீரென வகுப்பினுள் நுழையும் உருவத்தை அனைவரும் திரும்பிப் பார்த்தால் அங்கு குடித்து விட்டு யாரோ ஒருவரின் தந்தை நின்றுகொண்டிருக்கலாம். எதற்க்குப் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், யார் முன் பேசுகிறோம் என தன் அரைகுறை ஆடையைப் பற்றிய கவலை கூட இல்லாதவொரு நபரை நாகரீகமான முறையில் மட்டுமே நடந்துகொண்டு பேச்சை வளர்க்காமல் வழியனுப்பி வைப்பதென்பது எந்தளவில் இயலும் என நாமும் ஒரேயொரு நிமிடம் அங்கு நின்று சிந்தித்துப் பார்த்தால் நமக்கு மிஞ்சுவது வெறும் பதில்களற்ற மௌனம் மட்டுமே.

மறுபடியும் வகுப்பெடுக்கத் தொடங்கி அதில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து பாடத்தை மனதில் பதிய வைப்பதென்பது நொடி நேரப் பெருந்தவம் !!!

இவற்றையெல்லாமும் கடந்து கல்வி கடந்து அந்த மாணவர்களை ஏட்டுச்சுரைக் காய்களைத் தாண்டி கறிக்கு உதவும் வண்ணம் அவனைத் தயார்ப் படுத்துவதுடன், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் இன்னும் பல்வேறு மதிக்கத்தக்க தலைவர்களின் பிறந்த நாட்களின் கொண்டாட்டங்களுக்கு அவர்களை தயார்ப்படுத்துதலும், பல சமயங்களில் நடைபெறும் கணினி பயன்பாட்டுப்போட்டி,  ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, சதுரங்கப்போட்டி, கபடி, கோ கோ என இன்னுமின்னும் எக்கச்சக்கமான போட்டிகளுக்கும் மாணவர்களை முழுமையாக இந்த ஆசிரியர்களே தயார்படுத்துகின்றனர்.

இவற்றினிடையில் கல்வித்துறையின் பல்வேறு பயிற்சிகளைப் பெறுவதும், அரசு தரும் விலையில்லாப் பொருட்களை பெற்று வழங்குவதும், ஊர்க்கணக்கெடுப்பு நடத்துவதும், அரசாங்கத்தின் தேசிய அளவிலான கணக்கெடுப்பு நடத்துவதும், கழிவறைகள் இல்லாத இடங்களிலும், யானை போன்ற காட்டு விலங்குகள் உலாவுமிடங்களில் தேர்தல் பணிகளைச் செவ்வணே செய்வதும் கூட இவர்கள் தான் என்பது நமக்கு இவர்களின் மேல் ஆச்சர்யமான மரியாதையையே ஏற்படுத்துகிறது.

''இந்தா இத எழுதி குடு வாத்யாரே" என அவர்கள் சாப்பிடும் நேரம் கூட அவர்களைச் சிலர் விட்டு வைப்பதில்லை. இதில் சாதிய, ஆண் பெண் பாகுபாடுகளில் சிக்கிக்கொள்ளாமலும், தன்னையும், தன் மாணவர்களுக்கும் பாதுகாத்துக்கொள்வதென்பதெல்லாம் கத்தியின் மேல் கால் ஊன்றி நடக்கும் வேலை !

வகுப்பறையில் ஆசிரியர்கள் தூங்கிக்கொண்டிருந்த காலமெல்லாம் போய், ஆசிரியர்கள் இமைக்க நேரமில்லா காலம் வந்ததை அரசியல் தெடர்பற்ற ஆய்வாளர்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்ளுவர்.

மேற்சொன்ன சவால்கள் அனைத்தும் ஆசிரியர்கள் சந்திப்பது என்று மட்டுமில்லை, ஆசிரியர்களின் மூலமாக அரசு சந்திப்பது. தனியார் பள்ளிகளின் ஆடம்பரங்களையும், கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் மீறி இன்றளவும் தன்னால் இயன்ற அளவு அரசுப்பள்ளிகள் வென்று கொண்டேதான் இருக்கின்றன. அந்த வெற்றிகள் விளம்பரப்படுத்தப்படுவதில்லை, விவாதிக்கப்படுவதில்லை, வேண்டுமென்றே சில இடங்களில் மறைக்கவும் படுகிறது.

இதெல்லாம் காரணம் காட்டி மட்டும் அவர்கள் சம்பளம் வாங்கலாமா என்று இன்னும் சிலருக்கு ஐயம் இருக்கலாம். இதோ அதற்கான பதில்...

பல தனியார் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு பணமாக்கப்படுகிறது, முழுமையாக. நசஷ்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளைக் கணக்கெடுத்துச் சொன்னால் ஒரு வேளை உங்களுக்கு அந்த உண்மை விளங்கலாம். பெற்றோர் கூட கண்டுகொள்ளாத வருங்காலச் சந்ததியின் பெரும்பகுதியை அரசு ஆசிரியர்களை வைத்து ஆழ்ந்த பொறுப்புடன் கவனித்துக்கொள்கிறது. இங்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு பணமாக்கப்படுவதில்லை, வருங்கால சமூகத்தை திடமாக உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஆட்சிகள் மாறிக்கொண்டே தான் இருக்கும். அரசு என்பது அரசியல்வாதிகள் அல்ல. உள்ளார்ந்து பார்த்தோமானால் அரசு ஏழைகளுக்கானது, கவனிப்பற்றோருக்கானது, கல்வியற்றோருக்கானது. இவர்களையெல்லாம் மேல் கொண்டுவரும் அரசின் கருவிகள் மட்டுமே அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இவர்களின் சமூக சேவை மதிக்கப்படவில்லையெனும் சரி, நிச்சயம் நம்மால் மட்டுப்படுத்தப்படக்கூடாது.

மதிக்கப் பழகுவோம், அவர்களும் மனிதர்கள் தானே !

Monday, September 4, 2017

பள்ளிக்கூடம்

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 







பள்ளிக்கூடம் வலைப்பூ இனிய ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள்!


Pallikudam

FLASH NEWS:-புதன்கிழமை முதல் அசல் ஓட்டுநர் உரிமம்: கட்டாயம் சென்னை உயர்நீதிமன்றம்
நாளை மறுநாள் முதல் (செப்.6) அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

        வரும் புதன்கிழமை முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம்.லாரி உரிமையானளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. அனைத்து வகையான வாகன ஓட்டிகளும் கட்டாயம் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அசல் கேட்கப்படும். அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை அல்லது.ரூ.500 அபராதம். வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Sunday, September 3, 2017

Pallikudam

குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.

நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும். பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும்.

இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்த மாதிரியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.

உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.

மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது.

மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.

தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.