கற்பித்தல்

எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில்


       சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் ஒன்பதாம் வாய்ப்பாடு – கை விரல்கள் முலம் எளிமையாக கணக்கிடும் முறையை கூறினார்.
அதே முறையை பயன்படுத்தி மற்ற வாய்பாடுகளை உருவாக்கமுடியுமா என்று முயற்சித்து பார்க்கையில் முடியும் என்று விளக்கம் கிடைத்தது....

அதை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்....

எட்டாம் வாய்பாடு:
உதாரணத்தோடு பார்ப்போம்: 8 x 3 = 24

9 தாம் வாய்பாடு போலவே, 8 ஆம் வாய்பாடுக்கும், 8 யை எந்த என்னால் பெருக்க வேண்டுமோ அந்த விரலை மடக்கிக் கொள்ள வேண்டும்(3 ஆல் பெருக்க, 3 ன்றாவது விரலை மடக்கவும்). இடது புறம் உள்ள விரல்கள் எண்ணிகையும் (2 விரல்கள்), மற்றும் வலது புறம் உள்ள விரல்கள் எண்ணிக்கையும் (7 விரல்கள்) சேர்த்து வரும் எண்ணிலிருந்து (27), மடக்கின விரலுக்கான எண்ணை (3) கழித்தால் வருவது (27-3=24). 8 ஆம் வாய்ப்பாடு உருவாகி விட்டது.

இதே போன்று 
8 x 6 = 54 – 6 = 48
8 x 9 = 81 – 9 = 72
7 ஆம் வாய்ப்பாடு:
8 ஆம் வாய்ப்பாடு போலவே தான், ஆனால் மடக்கிய விரலுக்கான எண்ணை இரண்டு முறை கழிக்க வேண்டும்.
உதாரணம்:
7 x 7 = 63 – 7 – 7 = 49
7 x 9 = 81 – 9 – 9 = 63
7 x 1 = 9 – 1 – 1 = 7
6 ஆம் வாய்பாடு: மடக்கிய விரலுக்கான எண்ணை மூன்று முறை கழிக்க வேண்டும்
5 ஆம் வாய்பாடு: மடக்கிய விரலுக்கான எண்ணை நான்கு முறை கழிக்க வேண்டும்
..................
இதை ஒரு சூத்திரமாக கொடுக்க வேண்டும் என்றால் 
N – Nth table (வாய்ப்பாடு) 
M - Multiplier எந்த எண்ணால் பெருக்க வேண்டுமோ 
NLF – number of left side fingers (இடது புறம் உள்ள விரல்களின் எண்ணிக்கை)
NRF – number of right side fingers (வலது புறம் உள்ள விரல்களின் எண்ணிக்கை)
R – Result (விடை)
R = (NLF)(NRF) – (9 – N)* M
சில உதாரணம் செய்து பார்ப்போம்:
9 x 9 = 81 – (9 – 9)* 9 = 81
7 x 6 = 54 – (9 – 7)* 6 = 42
1 x 1 = 09 – (9 – 1)* 1 = 1
ஒன்றை கண்டிப்பாக ஒற்றுக்கொள்ள வேண்டும், ஒன்பதாம் வாய்பாடு அளவிற்கு மற்றது எளிமையாக இல்லை.
இருந்தாலும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு வேண்டும் பொழுது பயன் படுத்திக்கொள்ளலாம்.

அடிப்படைச் செயல்களை ஆர்வத்துடன் கற்க அருமையான software. 

 நண்பர் சத்தியவேலின் பள்ளி மாணவர்கள்

ஆசிரியர் நண்பர்களுக்கு அன்பான வணக்கம்.
மாணவர்களின் கணித அறிவை வளர்க்க அடிப்படைச்செயல்கள் (கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ) மிக அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறு மாணவர்களுக்கு அடிப்படை செயல்களை ஆர்வத்துடன் கற்க Math Educator என்கிற software உதவி செய்கிறது.
எங்கள் பள்ளியில் (ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி – விழுப்புரம் மாவட்டம். ) மாணவர்களுக்கு அடிப்படை செயல்களை திறமையாக செய்ய பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் இந்த Math Educator.
 இவற்றைப் பயன்படுத்தி கணினியின் மூலம் மாணவர்கள் கற்றலில் ஈடுபடுகின்றனர். வாரத்தில் ஒருநாள் (வெள்ளிக்கிழமை) இதற்காக பயன்படுத்துகிறோம். இதைப் பயன்படுத்தி கற்றலில் ஈடுபடும் போது மாணவர்கள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியாகவும் கற்கின்றனர். இதன் பிறகு தன்னம்பிக்கையுடன் கணித வகுப்பில் செயல்படுகின்றனர்.
பயன்படுத்தும் முறை:
இதில் Addition(கூட்டல்), Subtraction(கழித்தல்), Multiplicationபெருக்கல்), Division(வகுத்தல்) என நான்கு பிரிவுகள் உள்ளது.இதில் ஒவ்வொரு பிரிவிலும்  Level 1, Level 2, Level 3 என மூன்று உட்பிரிவுகள் உள்ளது. ஒவ்வொரு Level –லிலும் 10 கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு option கொடுக்கப்படுகிறது. சரியான விடையை Click செய்தவுடன் சரியாக இருந்தால் Correct என்றும்,
தவறாக இருந்தால் Wrong என்றும் பதிலளிக்கும். 10 வினாக்களுக்கு விடையளித்தப்பின் எத்தனை மதிப்பெண்கள் பெற்றனர் என்ற விவரம் கொடுக்கிறது. இதனால் அவர்களின் திறமையை அவர்களே கண்டறிந்து செயல்படுகின்றனர். நீங்களும் இந்த software – ரை Download செய்து தங்கள் பள்ளி மாணவர்களுக்கு பயன்படுத்தியப் பின்  தங்களின் மேலான கருத்துக்களைப் பகிருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.  இந்த Software – யை Download செய்ய கீழே உள்ள Link – கை கிளிக் செய்யவும்.




பெருக்கல் வாய்பாட்டை மகிழ்ச்சியுடன் கற்க அருமையான 2 Softwares :

பெருக்கல் வாய்பாட்டை மகிழ்ச்சியுடன் கற்க A Maths Games of MultiplicationMultiplication 101என்கிற Softwares துணைபுரிகிறது.

1. A Maths Games of Multiplication இதில் 1 முதல் 10 வாய்பாடுகள் வரை கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் எளிமையாக கற்கவும், கற்றதை மனதில் பதியவைக்கவும் முடிகிறது.
மாணவர்கள் சரியாக செய்தால் Robo போன்ற உருவம்,Correct, Verygood,, Great Job, God Job, Wonderful போன்றComments கொடுப்பதால், ஒவ்வொரு முறையும் நாம் சரியாக செய்தோம் என்ற மகிழ்ச்சி மாணவர்கள் மனதில் ஏற்படுகிறது.
மேலும் கற்கும் மனநிலை மாணவர்கள் மனதில் ஏற்படுகிறது. தவறாக செய்தால், எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விளக்கமும் தருகிறது. ஒவ்வொரு வாய்பாட்டின் முடிவிலும்Your Answer Correctly : _ Questions out of _ . என Result காட்டப்படுகிறது. மதிப்பெண் குறைவாக பெற்றால் Repeat Problem Questions எனவும், முழுமையாக செய்ய Play Again எனவும், அனைத்தும் சரியாக செய்தால் More Quizzes எனவும்வருகிறது. More Quizzes என்பதை கிளிக் செய்தால் முதன்மை பக்கத்தைக் காட்டும். அதில் எந்த வாய்பாடு வேண்டுமோ அதை கிளிக் செய்து அடுத்த வாய்பாட்டிற்கு செல்லலாம். இதை முடித்த பிறகு எந்த வாய்பாட்டில் எப்படி மாற்றி கேட்டாலும் விடையளிக்கும் திறனை மாணவர்கள் பெறுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

2. இதே போல்Multiplication 101 என்கிற Software பெருக்கலை எளிமையாக செய்ய துணைபுரிகிறது. இதில் எந்த வாய்பாடு வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டால் அதில் மாற்றி மாற்றி கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக்க வேண்டும். 10 வினாக்களுக்கும் சரியாக பதில் அளித்தால் பெரிய கைத்தட்டல் கிடைக்கும்.
இதுவும் மாணவர்களின் பெருக்கல் திறனை வளர்க்க பெரிதும் உதவுகிறது.
இவற்றை நீங்களும் உங்கள் பள்ளியில் பயன்படுத்தி பார்த்து எப்படி உள்ளது என தங்களின் மேலான கருத்துக்களை பகிருங்கள் ஆசிரிய நண்பர்களே! வேறு ஏதேனும் நல்ல Software  இருந்தால் தெரியபடுத்தவும் . இதை பொறுமையாக படித்தமைக்கு நன்றிகள் பல. 


Thanks . Thank you very much. Have nice day.

பரப்பு இழு விசை (Suface Tesion)



பரபப்பு இழு விசை (Suface Tesion)
Duration: 
00 hours 01 mins
தேவையான பொருட்கள்:
  1. ஒரு வட்ட வடிவமான கண்ணாடிப் பாத்திரம்
  2. ஒரு பிளாஸ்டிக் பிளேட்
  3. ஆறு ஒரே அளவான நாணயங்கள்
வீடியோவில் விளக்கியபடி கண்ணாடி பாத்திரத்தில் நீர் நிரப்பி பிளேட்டில் தலைகீழாக கவிழ்த்து வைக்கவும்.
பிறகு கண்ணாடிப் பாத்திரத்தின் எதிர் எதிரான மூன்று பக்கங்களில் மெதுவாக ஒவ்வொரு நாணயமாக ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு நாணயங்களை நுழைக்கவும்.
இப்பொழுது கண்ணாடிப் பாத்திரத்தின் விளிம்பிற்கும், பிளேட்டிற்கும் இடையே சுமார் 3 மி.மீட்டர் அளவு இடைவெளி இருப்பினும், நீர் வெளியே வராது.
அதற்குக் காரணம் நீர்ப்படலத்தின் பரப்பளவு இழுவிசையே காரணமாகும்.
ஆசிரியர் பிறகு பரப்பு இழுவிசையைப் பற்றி விளக்கிச் சொல்லலாம்.
பரப்பு இழு விசை என்பது ஒரு திரவத்தின் மேற்பரப்பின் சுருங்கும் தன்மையால் புற விசையை எதிர்க்கும் அதன் விசையைக் குறிக்கும். மேலும் பரப்பு இழுவிசை இரண்டு பரிணாமங்களாக அறியப்படுகிறது -
1. ஒரு அலகு நீளத்தின் விடை (Force per unit length.)
2. ஒரு அலகு பரப்பளவின் சக்தி (Energy per unit area)
மேலே குறிப்பிட்ட இரண்டு அலகுகளின் மதிப்பும் சமமாகும். ஆனால், பாரப்பளவு இழுவிசையை நீளத்தில் குறிப்பிடாமல் பரப்பளவில் குறிப்பிட்டால், அந்த விசை பரப்பளவு சக்தி (Surface Energy) என்று அறியப்படுகிறது.
பொதுவாக பரப்பளவு சக்தி என்ற கலைச் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால், பரப்பளவு சக்தி திரவம் - திடப்பொருள் ஆகிய இரண்டிற்கும் பொதுவானதாகும்.
இந்தப் பரிசோதனை குழந்தைகளை ஆச்சரியப்படவைப்பதுடன், நீரின் பரப்பளவு இழுவிசை பற்றிய பண்புகளை மனத்தில் பதிய உறுதுணையாக இருக்கும்.
மேலும் செய்வதற்குத் தேவையான பொருட்கள் குறைவு என்பதுடன், அவைகளை எளிதில் பெற முடிவும் என்பதும் இந்த பரிசோதனையின் சிறப்பாகும்.
இந்தப் பரிசோதனைக்கு உறுதுணையாக உள்ள இணைப்பு: இணைப்பு

'பை' (pi) கணித நாள்



மார்ச் 14-ம் தேதி-  ‘பை’ - pi - நாள் - என்று கொண்டாடப்படுகிறது. அதாவது கணிதத்தின் ‘பை’ என்ற மாறிலி எண்ணைக் கொண்டாடும் விதத்தில் மார்ச் 14-ம் தேதி தேர்வு செய்யப்பட்டது.   
பை’ என்ற இந்த கணித அடையாளக் குறியின் மதிப்பு சுமார் 3.14.. என்ற அளவில் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 3/14 என்பது மார்ச் மாதம் 14-ம் தேதியைக் குறிப்பதாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் கணித ஆர்வலர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய நாளாகும். இந்த நன் நாளில் ‘பை’-யைக் காதலிக்கும் ஒவ்வொருவரும் இந்தக் கொண்டாட்டத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்ள அழைக்கிறோம். நாம் நம் மனத்தை இது குறித்து, தயிர் கடைவது போல் கடைந்து கணித மேதைகளின் வெண்ணை போன்ற கருத்து உண்மைகளை நினைவு கூறும் முகத்தான் இந்த மின் வலை விவாத மேடை மூலம் பகிர்ந்து கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.  இந்த மாதம் முழுவதும் இந்த அற்புதமான தோண்டத் தோண்ட பலவிதமான உண்மைகளை வெளிப்படுத்தும் எண்ணைப் பற்றிய படைப்புகளை உங்களுக்கு விருந்தாக அளிக்க உள்ளோம். அதில் உங்களது பங்களிப்பையும் வருவேற்கிறோம் . இது குறித்த விவரங்களை - டீச்சர்ஸ் ஆப் இந்தியாவின்  ஃபேஸ் புக் பக்கங்களில் காணலாம்.
 











ஆங்கிலம் கற்பதற்கான பயனுள்ள வழிமுறைகள்...
இந்த உலகம் முழுவதும் வாழும் சுமார் 100 கோடி மக்கள், தங்களின் இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைப் பேசுகிறார்கள். இன்றைய வர்த்தக உலகில், ஆங்கிலத்தின் முக்கியத்துவம் அளவிட முடியாததாக இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில், ஆங்கிலத்தில் சரளமாக பேச மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆர்வமுடைய இளைஞர்களுக்கு அளவேயில்லை.


அவர்கள் பலவிதமான வழிகளை, அதன்பொருட்டு, முயற்சித்துப் பார்க்கிறார்கள். சிலர் வெற்றி பெறுகிறார்கள். பலர் தோல்வியடைகிறார்கள்.

வெற்றியடைந்தவர்கள் எப்படி சாதித்தார்கள்? தோல்வியடைந்தவர்கள், எதனால் தோல்வியடைந்தனர் என்பதற்கான காரணங்களை அறிதல் நல்லது. ஆங்கிலத் திறனை சிறப்பாக மேம்படுத்திக் கொள்வதற்கான 7 முக்கிய செயல்முறைகளைப் பற்றி தெரிந்துகொண்டால், பேருதவியாக இருக்கும். அவைப் பற்றி இங்கே விவாதிக்கலாம்.

இலக்கு நிர்ணயித்தல்

ஆங்கிலத்தை சிறப்பான முறையில் பேச பழகிக்கொள்வது எப்படி என்பதைப் பற்றி நாம் யோசிக்கையில் ஒன்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, எடுத்தவுடனேயே, ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பேசுவது போன்று பேச வேண்டும் என்று முயற்சிக்கக்கூடாது.

மாறாக, எதுபோன்ற விஷயங்களில் நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம் என்பதை அடையாளம் கண்டு, அவற்றை சரிசெய்ய முயல வேண்டும். இலக்கணம், உச்சரிப்பு மற்றும் வார்த்தை வளம்(Vocabulary) உள்ளிட்ட விஷயங்களில் சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறப்பாக ஆங்கிலம் பேசுவது என்பது, ஆங்கிலேயர் போல பேசுதல் என்பது அர்த்தமல்ல. இலக்கணப் பிழை அல்லாமல், தெளிவாக, திணறாமல் பேசுவதே ஆகும். தேவையற்ற ஸ்டைல் தேவையில்லை.

ஆங்கிலத்தில் பேசுதல்

நீங்கள் தவறாக பேசினாலும் பரவாயில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஆங்கிலத்தில் பேசிப் பழகுங்கள். பேசப் பேசத்தான் ஆங்கிலம் மட்டுமல்ல, எந்த மொழியும் நன்றாக பழகும். எனவே, உங்களின் குடும்பம், நண்பர் வட்டம், பள்ளி தோழர்கள், கல்லூரி தோழர்கள், வகுப்பறைகள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு நபர்களிடமும், பல்வேறு இடங்களிலும் ஆங்கிலத்தில் பேசுங்கள்.

ஆங்கிலம் நன்றாக தெரிந்தவர்களிடம் பேசுகையில், உங்கள் தவறுகளை, அவர்களை சரிசெய்யும்படி கேட்டுக்கொண்டு, அவர்களின் உதவியைப் பெற தயங்கக்கூடாது. உங்களின் ஆங்கில அறிவைப் பற்றிய Feedback -ஐ அவ்வப்போது கேட்டு வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப உங்களின் முயற்சியைத் தொடர வேண்டும். நாட்கள் செல்ல செல்ல, புலமை விரிவடைவதோடு, உங்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

சிறப்பாக கவனித்தல்

ஒரு நாணயத்தின் இரு பக்கங்களும் எப்படி முக்கியமானதோ, அதுபோல்தான், பேசுவதும் - கவனிப்பதும். தொடர்ந்து பேசுவது எந்தளவு உங்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துமோ, அதேஅளவு, ஆங்கில நிகழ்ச்சிகளை கவனித்தல், ஆங்கில செய்திகளைக் கேட்டல், பாடல் கேட்டல், படத்தை ஊன்றி பார்த்தல் உள்ளிட்ட கவனிப்பு நடவடிக்கைகள், ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதில் பெரிதும் துணைபுரியும்.

கவனித்தல் என்பது, ஒரு மொழியின் உள் அம்சங்களை புரிந்துகொள்ள துணைபுரியும். அதாவது, அதன் ஒலித்திறன், இசைத்தன்மை உள்ளிட்ட அம்சங்களை அறிந்துகொள்ளலாம்.

படிப்பதும் அவசியம்

ஆங்கிலத்திறனை வளர்த்துக்கொள்ள விழையும் ஒருவர், ஆங்கிலத்தில் அதிகம் படிப்பது இன்றியமையாதது. தரமான, ஆங்கில செய்தித்தாள்களைப் படிப்பது, உங்களுக்குப் பிடித்த துறையைச் சேர்ந்த நல்ல ஆங்கிலப் புத்தகங்களை வாசிப்பது, ஏதேனும் பட்டப்படிப்பை மேற்கொண்டால், அதை ஆங்கில வழியில் படிப்பது போன்றவை, ஆங்கில வாசிப்புத் திறனை அதிகப்படுத்தி, நல்ல வார்த்தை வள அறிவையும் வழங்கும். இதன்மூலம், ஒரு ஆங்கில விஷயத்தை, எளிதில் வாசித்து புரிந்துகொள்ளும் வகையில் பக்குவம் ஏற்படும்.

வார்த்தை வள மேம்பாடு

ஆங்கிலத்தைப் படிக்கையில், தெரியாத வார்த்தைகள் இருந்தால், அதை தனியே எழுதி, அதன் அர்த்தத்தை அருகிலேயே எழுதிக்கொள்ள வேண்டும். பிறகு, அந்தப் புதிய வார்த்தையை, அடிக்கடி பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் அது மறக்காது.

இன்னொரு தவறான நம்பிக்கை ஒன்று உள்ளது. அதாவது, ஒரு நல்ல ஆங்கில பேச்சாளர் என்பவர், கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, நீண்ட வாக்கியங்களில் பேச வேண்டும் என்பதுதான் அது. இந்த எண்ணத்தை முதலில் களைய வேண்டும்.

எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி, சிறிய வாக்கியங்களின் மூலம், இலக்கணப் பிழையின்றி தெளிவாக பேசும் ஆங்கிலமும் சிறந்த ஆங்கிலம்தான். ஒருவகையில் சொல்லப்போனால், அந்த வகையான ஆங்கிலத்தைதான் பெருவாரியான மக்கள் விரும்புகிறார்கள். KISS என்ற வார்த்தைக்கு Keep It Short and Simple என்று பொருள். இதை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.

உச்சரிப்பு தெளிவு

ஆங்கிலம் மட்டுமல்ல. எந்த மொழியானாலும், அதைப் பேசுகையில், நல்ல உச்சரிப்பு என்பது ஒரு அத்தியாவசியமான அம்சம். பிறரின் கவனிப்பையும், பாராட்டையும் பெற்றுத் தருவதில் உச்சரிப்புக்கு முக்கியப் பங்குண்டு. ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் பயிற்சியில், உச்சரிப்பும் ஒரு பிரதான அம்சம்.

உச்சரிப்பை மேம்படுத்துவதில் கவனித்தலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலப் பயிற்சி CD -களை வாங்கி கேட்டல், Stress, Syllable உள்ளிட்டவைகள் பற்றி விளக்கக்கூடிய CD -களை வாங்கி தொடர்ந்து கேட்டல் போன்றவை உங்களின் உச்சரிப்புத் திறனை வளப்படுத்த பேருதவி புரியும்.

பரிந்துரைக்கப்பட்ட ஆங்கில நிகழ்ச்சிகளை, தொலைக்காட்சிகளில் பார்த்து, உச்சரிப்புகளைக் கற்றுக் கொள்ளலாம். ஆங்கிலம் நன்கு தெரிந்த சிலருக்குள், உச்சரிப்பு வேறுபாடுகள் இருப்பதை நீங்கள் கண்டறியலாம். அதுபோன்ற சமயங்களில், எது சரி என்பதை உறுதி செய்வதும் அவசியம்.

எப்போதுமே, முக்கியமான இடங்களில் பேசுகையில், தேவையற்ற Jargons மற்றும் Slang ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவற்றால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.

குரலைப் பதிவு செய்தல்

நீங்கள் பேசும் அல்லது வாசிக்கும் ஆங்கிலத்தை பதிவுசெய்து வைத்து, பின்னர் அதை கவனிக்கவும். இதன்மூலம் உங்களின் நிறை-குறைகளை சிறப்பாக அவதானிக்கலாம். இதன்மூலம், உங்களின் உச்சரிப்பு மட்டுமன்றி, இலக்கண சுத்தம் உள்ளிட்ட பல விஷயங்களையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

உங்களுக்கு நீங்களே பேசிக்கொள்ளல்

கண்ணாடி முன்னால் நின்று பேசிக்கொள்ளுதல் ஒரு சிறப்பான உபாயமாகும். இதன்மூலம், முகபாவனை, உடல் மொழி ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளலாம்.

ஐயோ, தவறாக பேசிவிடுவோமா என்ற பயத்தில், ஆங்கிலத்தை பலபேர் பேசுவதையே தவிர்க்கின்றனர். இது மிகப்பெரிய தவறு. தோல்விகள் அல்லாத வெற்றி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தவறின் மூலமும், நீங்கள் ஒன்றை கற்றுக்கொள்கிறீர்கள் என்பதை மறத்தல் கூடாது. ஆங்கிலம் மட்டுமல்ல, எந்தவொரு மொழியை கற்றுக்கொள்ளவும், பொறுமை, விடாமுயற்சி, நல்ல கவனிப்புத் திறன், கட்டுக்கடங்காத ஆர்வம் போன்ற பண்புகள் இன்றியமையாதவை. ஒரு மாதத்தில் அல்லது சில மாதங்களில் ஆங்கிலத்தை சிறப்பாக கற்றுக்கொண்டு விடலாம் என்று நினைப்பதும் தவறு.

அவரவர் திறனைப் பொறுத்து, காலநேரம் வேறுபடலாம். சிலருக்கு வருடக்கணக்கில் கூட ஆகலாம். ஆனால், அதற்காக மலைத்து நிற்றல் அறிவுடைமை ஆகாது. கடைசிவரை ஆங்கிலம் தெரியாமலேயே இருப்பதைவிட, வருடக் கணக்கில் முயற்சி செய்தாவது, அதைக் கற்றுக்கொள்வது 100 மடங்கு மேல் என்பதை உணருங்கள்.

ஆங்கில மேம்பாட்டிற்கான சில எளிய ஆலோசனைகள்

* ஒரு நாளைக்கு ஒரு வார்த்தைக் கற்றல்
* உங்களின் குரலைப் பதிவுசெய்யல்
* டிக்ஷனரி பயன்படுத்துதல்
* சத்தமாகப் படித்தல்
* கண்ணாடியின் முன் நின்றுகொண்டு பேசிப் பழகுதல்
* தினந்தோறும் சர்வதேச ஆங்கில சேனல்களைப் பார்த்தல்
* விளையாட்டுகளின் மூலம் ஆங்கிலம் கற்றல்
* ஆங்கிலத்தில் சிந்தனை செய்தல்


செய்தி






மாணவர் சேர்க்கை படிவம்/ மாதாந்திர அறிக்கை/ சம்பளப்பட்டியல் தொடக்க நடு நிலைப் பள்ளிகளுக்கு உரியது


பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாட பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சுதந்திர தின விழா 2013 - அனைத்து சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடுதல் சார்ந்து அறிவுறை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

University of Madras UG Degree Examination April 2013 Results | சென்னை பல்கலை இளங்கலை தேர்வு April 2013 முடிவுகள் வெளியீடு


சி.இ.ஓ., மாற்றம்

               பள்ளி கல்வித் துறையில், பல மாதங்களாக இழுபறியில் உள்ள அதிகாரிகள் மாற்றம் மற்றும் பதவி உயர்வு, ஓரிரு நாளில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



           கல்வித் துறையில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் பணியிடம், இயக்குனர் நிலையில், பாடநூல் கழகச் செயலர் பணியிடம் மற்றும் நூலகத்துறை, தேர்வுத் துறையில், இரு இணை இயக்குனர் பணியிடங்கள் ஆகியவை காலியாக உள்ளன.

           இரு இணை இயக்குனர்கள், பதவி உயர்வு நிலையில் உள்ளனர். எனவே, முதன்மை கல்வி அதிகாரிகளாக உள்ள, நான்கு பேர், இணை இயக்குனர்களாக, பதவி உயர்வு செய்யப்பட உள்ளனர். இணை இயக்குனர்கள் மாற்றங்களால், இயக்குனர் அளவிலும், மாற்றங்கள் நடக்கும் என, பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

           எனினும், பல்வேறு காரணங்களால், அதிகாரிகள் மாற்றம், தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர்கள், ஐந்து பேர், மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சி.இ.ஓ., செல்வகுமார், விருதுநகர் மாவட்ட சி.இ.ஓ.,வாக (ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ.,) மாற்றப்பட்டுள்ளார்.

                தனி சி.இ.ஓ., ராமசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., மகேஸ்வரி, அதே மாவட்டத்தில், ரெகுலர் சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

             டி.ஆர்.பி.,யில், துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த பூபதி, திருச்சி மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ., சுகன்யா மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர், இணை இயக்குனர் பதவி உயர்வு பட்டியலில் உள்ளார்.

              எனவே, ஓரிரு நாளில், இணை இயக்குனர் பதவி உயர்வு பட்டியல் வெளியானதும், இணை இயக்குனராக, கன்யா பொறுப்பேற்பார் என, கூறப்படுகிறது.சி.இ.ஓ.,க்களை தொடர்ந்து, தற்போதைய இணை இயக்குனர்கள் மற்றும் பல இயக்குனர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழகம் ஏற்பாடு

        வரும் செப்டம்பர் இறுதியில், ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வழங்க, இரண்டாம் பருவத்திற்கு, 2.29 கோடி பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியை, பாடநூல் கழகம், மும்முரமாக செய்து வருகிறது.


           ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் முதல், செப்டம்பர் வரை, முதல் பருவம்; அக்டோபர் முதல், டிசம்பர் வரை, இரண்டாம் பருவம்;  ஜனவரி முதல், ஏப்ரல் வரை, மூன்றாம் பருவம் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

           இதன்படி, பாடப் புத்தகங்கள், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனியே அச்சடிக்கப்பட்டு, மாணவருக்கு வழங்கப்படுகின்றன. இரண்டாம் பருவத்திற்காக, 2.29 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, 100 அச்சகங்களில் நடந்து வருகின்றன.

          பல அச்சகங்களில் இருந்து, பாடப் புத்தகங்கள் தயாராகி, வெளிவர ஆரம்பித்து விட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அச்சகங்களில் இருந்து, நேரடியாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து, செப்டம்பர், கடைசி வாரத்தில், மாணவர்களுக்கு, புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

            நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக வழங்கப்பட்ட, பிளஸ் 1 புத்தகங்களின் பின்பக்க அட்டையில், மாணவியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள், அச்சடிக்கப்பட்டுள்ளன.

          "காணாமல் போகும் குழந்தைகள், கொடுமைக்கு இரையாகும் குழந்தைகள், வீட்டிலிருந்து ஓடிப்போன குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், கவனிப்பும், பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகள், "1098" என்ற எண் மூலம், "சைல்டு லைன்" அமைப்பை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம்" என அச்சடிக்கப்பட்டுள்ளது.

            இந்த வாசகம், அடுத்த கல்வி ஆண்டில், மேலும் சில வகுப்பு புத்தகங்களில் அச்சடிக்கப்படும் என, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

THURSDAY, JULY 11, 2013



குரூப்–2 தேர்வு அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகிறது; 3 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. திட்டம்

நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர், தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியிடப்படுகிறது. இதன்மூலம் சுமார் 3 ஆயிரம் காலி பணி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டு உள்ளது.


குரூப்–2 தேர்வு
தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி, நகராட்சி கமிஷனர் (கிரேடு–2), உதவி வணிகவரி அதிகாரி, சார்–பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி, உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு தணிக்கை அதிகாரி, வருவாய் உதவியாளர் உள்பட பல்வேறு விதமான பதவிகளை நிரப்புவதற்காக குரூப்–2 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிறது.

முன்பு நேர்காணல் கொண்ட பதவிகள், நேர்காணல் இல்லாத பதவிகள் இரண்டு பதவிகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக குரூப்–2 தேர்வு நடத்தப்பட்டு வந்தது. அண்மையில் செய்யப்பட்ட மாற்றத்தின்படி, நேர்காணல் உள்ள பணிகளுக்கு தேர்வு தனியாகவும், நேர்காணல் அல்லாத பணிகளுக்கான தனித்தேர்வும் முதல்முறையாக நடத்தப்பட உள்ளது.

3 ஆயிரம் காலி இடங்கள்
2013–2014–ம் ஆண்டுக்கான வருடாந்திர காலஅட்டவணையின்படி, இந்த ஆண்டுக்கான குரூப்–2 தேர்வு பற்றிய அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. அதேபோல், நேர்காணல் அல்லாத பணிகளுக்கான குரூப்–2–ஏ தேர்வுக்கு இந்த மாதம் அறிவிப்பு வெளியிட வேண்டும். இரண்டு தேர்வுகளுக்கான காலி இடங்களும் துறைவாரியாக இன்னும் முழுமையாக பெறப்படாததே தாமதத்திற்கு காரணம் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், நகராட்சி கமிஷனர், உதவி வணிகவரி அதிகாரி, சார்–பதிவாளர், தலைமைச் செயலகம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலக உதவி பிரிவு அதிகாரி, வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் சுமார் 3 ஆயிரம் காலி இடங்கள் இந்த ஆண்டு குரூப்–2 தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மாத இறுதியில் அறிவிப்பு
குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரி ஒருவர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் தெரிவித்தார்.

மேலும், துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. வணிகவரி உதவி கமிஷனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்–1 தேர்வுக்கான காலி பணியிடங்களும் சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து ஒவ்வொன்றாக பெறப்பட்டு வருவதாகவும், டி.எஸ்.பி. பதவியில் மட்டும் 30 காலி இடங்கள் வந்திருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.


news

Latest Post Continue GO's For KH & BC Head upto 30.06.2013


  1. Express Pay Order For BC Head upto 31.12.2013
  2. Express Pay Order For BC Head upto 30.06.2013
  3. Express Pay Order For KH Head upto 31.12.2013
  4. Express Pay Order For BC Head upto 31.05.2013
  5. Express Pay Order For DEE-25 Contingency Service Post upto 31.12.2013 
  6. Express Pay Order GO 200&279-4748&6239 BT Post upto 31.12.2013
  7. Express Pay Order GO 151-2011-12 -- 100 Ugraded HSS Schools Posts upto 31.12.2013
  8. Express Pay Order - Go: 143 - 2008-09 & 2009-10 UPGRADED HIGH / HSS SCHOOLS - 790 BT & PG POST PAY CONTINUATION UPTO 31.12.2013
  9. Express Pay Order for 100 HRSSchool PG's - upto 30.04.2013
  10. Express Pay Order for GO 142 & 200 - 6239 BT Post Continue upto 30.04.2013
  11. Express Pay Order for GO 101 to 246 - 790 BT Post Continue upto 30.04.2013
  12. Express Pay Order  for GO 279 - 4748 BT Post Continue upto 30.04.2013
  13. Express Pay Order for GO175,199 - 32 PG Post Continue upto 30.04.2013
  14. Express Pay Order for GO 47 - 5000 Sweeper&Watchman Post Continue upto 01.06.2013
  15. Express Pay Order for GO 120 - 900 PG Post Continue upto 31.03.2013
  16. Express Pay Order for GO 198 - 1282 BT Post Continue upto 31.03.2013 
  17. Express Pay Order to 1590 PG Post & 6872 BT Post Continue upto 30.04.2013
  18. Express Pay Order to 7979 BT Post Continue upto 30.06.2013
  19. 344 RMSA High School Post Continue upto 31.05.2013
  20. 710 RMSA High School Post Continue upto 06.12.2013
  21. Express Pay Order to DEE -21 Post upto 31.03.2013
  22. Express Pay Order - 013537 - Upto 31.05.2013
  23. Express Pay Order for Vocational Teacher Post - GO 100 - Upto 31.05.2013
  24. Express Pay Order - 6106 - Upto 28.02.2013


RTI






Thanks To - Computer Instructor, GHSS, Ariyalur District.




வ.எண்
தகவல் அறியும் உரிமை சட்டம்
வழியாக பெறப்பட்ட
தகவல்கள்
தகவல்வழங்கியதுறை
1
DSE-JDP
2

3
DEE
4
DEE
5
TRB
6
 DSE
7

8
TN
9
ADW
10

11

12

13
 Data Center CPS Amount Transfer to AG Office – New Data Center
14
 Double Degree படித்தவர்கள் TET தேர்வு எழுத தகுதி இல்லை – NewTRB
15
TRB Reply Before judgement

16
Data Center CPS Amount Transfer to AG Office Data Center
17
 Two Degrees in Same Year – Not Eligible DSE
18
 Economics Not Eligible to TET TRB
19
 Salem Vinayaga Mission University – M.Phil Not Eligible to Promotion or IncentiveDSE
20


21


22


23


24


25


26


27


28


29


30


31


32


33


34


35


SSA - வட்டார வள மையம் / தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 2013-14ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

டி.ஆர்.பி., பணியிடங்கள் பல மாதங்களாக காலி: அலுவலர்கள் திணறல்

           முதுகலை ஆசிரியர் தேர்வு, டி.இ.டி., தேர்வு, உதவிப் பேராசிரியர் தேர்வு என, பல்வேறு தேர்வுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள டி.ஆர்.பி.,யில், மிக முக்கியமான உறுப்பினர் - செயலர் பணியிடமும், டி.இ.டி., இயக்குனர் பணியிடமும், நிரந்தரமாக நிரப்பப்படாமல், கூடுதல் பொறுப்பு நிலையில், வேறு அலுவலர்களிடம், பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



       இதனால், கூடுதல் பணிப் பளுவால், டி.ஆர்.பி., அலுவலர்கள் திணறி வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி.,க்கு அடுத்தபடியாக, அதிகளவில், அரசுப் பணி நியமனங்களை நிரப்பும் பணியை, டி.ஆர்.பி., செய்து வருகிறது. வெறும், 20 பணியாளர்களுடன், இந்த அமைப்பு இயங்கி வருகிறது.

         முதுகலை ஆசிரியர் தேர்வு, டி.இ.டி., தேர்வு என, ஒவ்வொரு தேர்வையும், பல லட்சம் பேர் எழுதுகின்றனர். இதனால், பணிப் பளு, கடுமையாக அதிகரித்துஉள்ளது. இதற்கு தகுந்தாற்போல், கூடுதல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

           இந்நிலையில், மிக முக்கியமான, உறுப்பினர் - செயலர் பணியிடமும், டி.இ.டி., இயக்குனர் பணியிடமும், பல மாதங்களாக, நிரப்பப் படாமல் உள்ளன.

          டி.ஆர்.பி., உறுப்பினர் அறிவொளியிடம், உறுப்பினர் - செயலர் பதவி, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோல், டி.இ.டி., தேர்வை, 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுவதால், அந்தப் பணியை கவனிப்பதற்கு என, தனி இயக்குனர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டது.

             தொடக்க கல்வித் துறை இயக்குனராக இருந்த சங்கர், டி.இ.டி., இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவரது பணியிடம், ஒரு ஆண்டு வரை என்ற அளவில், ஏற்படுத்தப்பட்டது. பதவிக்காலம் முடிவடைந்தும், மீண்டும் நீட்டிப்பு செய்ய, நடவடிக்கை எடுக்கவில்லை. சங்கருக்கு, வேறு பணியிடமும் வழங்கவில்லை. இதனால், பல மாதங்களாக, அவர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

                 டி.இ.டி., இயக்குனர் இல்லாததால், அவரது பணியைக் கவனிக்க, இணை இயக்குனர் நிலையில், புதிய பணியிடம் ஏற்படுத்தப்பட்டு, அதன் இணை இயக்குனராக தங்கமாரி, பணி புரிந்து வருகிறார். இவர், ஏற்கனவே, தேர்வுத் துறை இணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். டி.ஆர்.பி., பணியிடம், கூடுதலாக தரப்பட்டுள்ளது.

                   இரு துறைகளிலும், கடுமையான பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை, இணை இயக்குனருக்கு ஏற்பட்டுள்ளது. வரும், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு என, அடுத்தடுத்து பல்வேறு தேர்வுகள் நடைபெற இருப்பதால், டி.ஆர்.பி., பணிப் பளு அதிகரித்துள்ளது.

              மிக முக்கியமான ஒரு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவும், தேவையான கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், தமிழக அரசு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துறை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

மூளையைத் தூங்க விடாதீர்கள்!



           பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை

3. புதிதாகச் சிந்தித்தல்

       இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

       ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

           இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
          புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

           தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

           இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

           இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

          புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

              உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

           ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.


தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்

          இரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம், புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

         தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, ஏற்கனவே, 5,000த்திற்கும் மேற்பட்ட மெட்ரிக்குலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, புதிய கல்வி கட்டணங்களை நிர்ணயித்து, தமிழக அரசு இணைய தளத்தில் வெளியிட்டது.

           தற்போது, இரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து, அதன் விவரங்களை, www.tn.gov.in என்ற, தமிழக அரசு இணைய தளத்தில், கட்டண நிர்ணய குழு வெளியிட்டுள்ளது.

          வழக்கம்போல், பெரிய பள்ளிகளுக்கு, அதிகளவிலும், சிறிய பள்ளிகளுக்கு, குறைவனான கட்டணங்களையும், கட்டண நிர்ணய குழு, நிர்ணயித்துள்ளது. பெற்றோர், தமிழக அரசு இணைய தளத்தின் மூலம், புதிய கட்டண விவரங்களை அறியலாம்.மேலும், புதிய கட்டண விவரங்களை, அறிவிப்பு பலகையில், பள்ளி நிர்வாகங்கள் வெளியிட வேண்டும் என, கட்டண குழு உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்கலை இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

        சென்னை பல்கலைக்கழக இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

         சென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய பி.ஏ., - பி.காம்., - பி.எஸ்சி., - பி.பி.ஏ., - பி.பி.எம்., உள்ளிட்ட, இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.www.unom.ac.inwww.kalvimalar.com உள்ளிட்ட இணையதளங்களில், தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

     மொபைல் போன் மூலம் இளங்கலை தேர்வு முடிவுகளை அறிய, Result என டைப் செய்து இடைவெளி விட்டு, UNOMUG என டைப் செய்து இடைவெளி விட்டு, பதிவு எண்ணை குறிப்பிட்டு, 56263 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., செய்ய வேண்டும்.

          மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர், The Registar, University of Madras என்ற பெயரில், ஒவ்வொரு பாடத்திற்கும் தலா, 750 ரூபாய்க்கு, வங்கிக் காசோலை எடுத்து விண்ணப்பிக்கலாம்.

         மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர், The Registar, University of Madras என்ற பெயரில், ஒவ்வொரு பாடத்திற்கும், தலா, 200 ரூபாய்க்கு, வங்கிக் காசோலை எடுத்து விண்ணப்பிக்கலாம். ஜூலை 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

         ஐந்து பருவ தேர்வுகளிலும், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஆறாவது பருவ தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்திருந்தால், உடனடி தேர்வை எழுதலாம். தேர்வு எழுத விண்ணப்பிப்பவர், The Registar, University of Madras என்ற பெயரில், 300 ரூபாய்க்கு, வங்கிக் காசோலை எடுத்து ஜூலை, 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலை, 27ம் தேதி, சென்னை, அண்ணா நகர், ஸ்ரீகிருஷ்ணசாமி பெண்கள் கல்லூரியில், உடனடி தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு எழுதவுள்ள மாணவர், ஹால் டிக்கெட்டுகளை, வரும் ஜூலை, 25ம் தேதி, பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

     மறுமதிப்பீடு மற்றும் உடனடி தேர்வுக்கான விண்ணப்பங்களை, www.unom.ac.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சட்டப் பல்கலை இணையதளம் முடங்கியது: பரிதவித்த மாணவர்கள்

          சட்டப் பல்கலைக்கழக இணைய தளம் திடீரென முடங்கியதால், "கட்-ஆப்" மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல், மாணவர்கள் பரிதவித்தனர்.

         "அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில், பி.ஏ., பி.எல்., ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி நடைபெறுகிறது. மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் www.tndalu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது" என சட்ட பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் அறிவித்தது.

          இதையடுத்து, தங்களின், "கட்-ஆப்" மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள, மாணவர்கள் இணைய தளத்தை தொடர்பு கொண்டனர். இருந்தும் நேற்று இரவு வரை, பல்கலைக்கழக இணைய தளம் முடங்கியே இருந்தது. இதனால் மாணவர்கள் பரிதவித்தனர்.

          இதுகுறித்து, மாணவி ஒருவர் கூறுகையில், "நான் பிளஸ் 2வில், 786 மதிப்பெண் பெற்று, ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளேன். இதுவரை, எனக்கு அழைப்பு கடிதமும் கிடைக்கவில்லை. இடம் கிடைக்குமா என்பதை, இணைய தளம் மூலமும் அறிய முடியவில்லை" என்றார்.

             இதுகுறித்து, சட்ட பல்கலைக்கழகத்தினர் கூறுகையில், "இணையதளத்தில் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. விரைவில், இணைய தளம் பயன்பாட்டிற்கு வரும்" என்றனர்.

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு


          உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, வரும், 26ம் தேதி வரை, காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

         அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு, கடந்த, 2011ல் அறிவிக்கப்பட்டது. இரு ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்து, மூன்றாவது ஆண்டில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஜூன் 19ம் தேதியில் இருந்து, கடைசி நாளான நேற்று வரை, 32 மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதுவரை, 5,000த்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

              இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, வரும், 26ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

No comments: